மேற்காசிய நாடுகளில் நிலவக்கூடிய போர் பதற்றம் இந்தியாவில் எல்பிஜி பற்றாக்குறையை தீவிரப்படுத்தி இருக்கிறது. கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக இந்தியாவிற்கு வளைகுடா நாடுகளில் இருந்து எல்பிஜி கொண்டுவரப்படவில்லை. தன்னுடைய எல்பிஜி தேவைக்கு பெரும்பாலும் வெளிநாடுகளையே இந்தியா சார்ந்து இருப்பதால் பெரிய அளவிலான எல்பிஜி தட்டுப்பாடுக்கு வித்திட்டு இருக்கிறது.
எண்ணெய் நிறுவனங்கள் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்தி வைத்து விட்டன. குறிப்பிட்ட சதவீதத்தில் மட்டுமே வணிக பயன்பாட்டு சிலிண்டர் விநியோகம் செய்யப்படுகிறது. அதுவும் மருத்துவமனைகள், கேண்டீன்கள் என முன்னுரிமை அடிப்படையில் தான் வழங்கப்பட்டு வருகிறது. நிலைமை இப்படி இருக்க வீட்டு உபயோக பயன்பாட்டு சிலிண்டர் முன்பதிவு செய்தாலும் முன்பை போல தங்களுக்கு சிலிண்டர் கிடைப்பது இல்லை என மக்கள் புகார் கூறுகின்றனர்.

சிலிண்டர் முன்பதிவு செய்து ஒரு வாரம் பத்து நாட்களுக்கு மேல் காத்திருக்க வேண்டி இருப்பதாக புகார் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். இந்த சூழலில் தான் பொதுமக்களுக்கு முறையாக சிலிண்டர் கிடைக்க வேண்டும் டெலிவரி செய்யக்கூடிய ஊழியர்களோ அல்லது நிறுவனங்களோ வீட்டு உபயோக பயன்பாட்டுக்கு வழங்க கூடிய சிலிண்டர்களை தவறான வழிகளில் விற்பனை செய்து கணக்கு காட்டி விடக்கூடாது , சிலிண்டர்களைப் பதுக்கி கள்ள சந்தைகளில் விற்பனை செய்யக்கூடாது செய்வதை தடுக்கவும் ஓடிபி டெலிவரி நடைமுறை நாடு முழுவதும் அமலுக்கு கொண்டு வரப்பட்டது.
இதன்படி வாடிக்கையாளர் தங்கள் வீட்டு உபயோக பயன்பாட்டிற்கு சிலிண்டர் வேண்டும் என வேண்டும் என முன்பதிவு செய்தால் அவருடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும் , சிலிண்டர் டெலிவரி செய்யப்படும் போது அந்த ஓடிபி-ஐ கூறினால் தான் உங்களுக்கு சிலிண்டர். முதலில் குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே இருந்த இந்த நடைமுறை தற்போது நாடு முழுவதுமே அமலுக்கு வந்துவிட்டது. எனவே சிலிண்டர் முன்பதிவு செய்த உடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி மெசேஜை மக்கள் பத்திரமாக வைத்து கொள்ள வேண்டும்.

சிலிண்டர் டெலிவரி செய்யும் ஊழியர் உங்களிடம் இருந்து ஓடிபி-ஐ பெறுவார். இதனை அடுத்து ஏஜென்சி ஊழியர்கள் தங்கள் கணினி அமைப்பில் அந்த ஓடிபி-ஐ உள்ளிட்டால் தான் சிலிண்டர் வெற்றிகரமாக விநியோகம் செய்யப்பட்டது என்பது கணக்கில் கொள்ளப்படும். இதனை விநியோக அங்கீகாரக் குறியீடு என அழைக்கிறார்கள். சிலிண்டர் விநியோகம் செய்யும் நிறுவனம் வாடிக்கையாளரிடம் தான் சிலிண்டரை வழங்கியது என்பதை உறுதி செய்கிறது இந்த ஓடிபி சிஸ்டம்.
நாடு முழுவதும் எல்பிஜி தட்டுப்பாடு நீடிக்கும் நிலையில் சிலிண்டர் டெலிவரி செய்யும் நபர் வீட்டிற்கு வந்து சிலிண்டரை டெலிவரி செய்யும் போது மட்டுமே ஓடிபி வழங்க வேண்டும். ஒரு வேளை அவர் வராமலேயே எங்கேயோ இருந்தோ அல்லது ஏஜேன்சியில் இருந்தோ போன் செய்து ஓடிபி கேட்டால் தரக்கூடாது.ஏனெனில் உங்களின் சிலிண்டர் வேறு ஒருவருக்கு விற்பனை செய்யப்படலாம். எனவே ஓடிபி வழங்கும் போது கவனம் தேவை.
அதே வேளையில் ஏராளமானவர்கள் சிலிண்டர் இணைப்பு பெறும் போது ஒரு தொலைபேசி எண்ணை கொடுத்திருப்பார்கள், ஆனால் இப்போது அந்த நம்பர் பயன்பாட்டில் இல்லாமல் போகலாம். இந்த ஓடிபி என்பது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு தான் போகும். இதுவும் சிலிண்டர் டெலிவரியில் சிக்கலை ஏற்படுத்தியது. பணம் கட்டியும் ஓடிபி வரவில்லை, சிலிண்டர் வரவில்லை என மக்கள் புகார் கூறுகின்றனர்.
இந்த பிரச்சினைக்கும் எண்ணெய் நிறுவனங்கள் தீர்வு கண்டு விட்டன. இனி எந்த போனில் இருந்து நீங்கள் சிலிண்டர் முன்பதிவு செய்கிறீர்களோ அதில் உள்ள சிம்கார்டுக்கே ஓடிபி வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் வேறு போனில் இருக்கலாம் ஆனால் நீங்கள் வேறு போனில் செயலி மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்கிறீர்கள் என வைத்து கொள்வோம். அப்படி இருக்கும் போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் எந்த போனில் இருந்து பதிவு செய்தீர்களோ அதில் உள்ள மொபைல் எண் ஆகிய இரண்டுக்குமே ஓடிபி வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிலிண்டர் இணைப்பு பெற்றவர்கள் தங்களின் பழைய நம்பர் செயல்பாட்டில் இல்லை என்றால் கேஸ் ஏஜென்சி தொடர்பு கொண்டு அதனை புதிய நம்பருக்கு மாற்றி கொள்வது நல்லது என ஏஜென்சிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. எல்பிஜி தட்டுப்பாடு நீடிக்கும் நிலையில் மக்கள் சிறு தவறுகளால் தங்களுக்கு சிலிண்டர் கிடைப்பதை தவறவிட்டு விட கூடாது.
More From GoodReturns

LPG சிலிண்டரை விட்டு தள்ளுங்க!! இந்த கனெக்ஷனுக்கு மாறிட்டா சிலிண்டர் பத்தின கவலையே வேண்டாம்!!

LPG வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!! கேஸ் இணைப்பு துண்டிக்கப்படும் என அறிவிப்பு!!

இனி சிலிண்டர் புக் செய்து காத்திருக்க வேண்டாம்!! வந்துவிட்டது LPG ATM..!! 2 நிமிஷத்துல சிலிண்டர்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

சிலிண்டர் தட்டுப்பாடு: இனி 35 நாட்களுக்கு ஒருமுறை தான் சிலிண்டர் முன்பதிவு செய்ய முடியுமா?

தீவிரமடையும் ஈரான் போர்: ஓமன் வளைகுடாவுக்கு போர் கப்பல்களை அனுப்பும் இந்தியா!! அடுத்தது என்ன?

வீட்டு கேஸ் சிலிண்டரின் எடை 10 கிலோவாக குறைக்கப்படுகிறதா? மத்திய அரசு சொல்வது என்ன?

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

14.2 கிலோ சிலிண்டரில் 10 கிலோ LPG.. மத்திய அரசின் புது திட்டம்.. நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை..!

இந்தியாவுக்கு குட்நியூஸ்..!! ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் திடீரென மனம் இறங்கிய ஈரான்..!!

சிலிண்டர் பிரச்சனைக்கு தீர்வு: அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்தது மிகப்பெரிய எல்பிஜி கப்பல்!!

அடிசக்க.. சொன்னதை செய்த Iran..!! இந்தியாவுக்கு லட்டு மாதிரி வரும் 2 LNG கப்பல்..!

எல்பிஜி தட்டுப்பாட்டை சரி செய்ய அமெரிக்காவை நாடும் இந்தியா..!! நிலைமை எப்போது சீராகும்?

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு



Click it and Unblock the Notifications

