வளைகுடா பகுதியில் ஈரான் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், டிரம்ப் மிரட்டலுக்கு பின்பு ஹார்மூஸ் பாதையை மொத்தமாக முடக்கிவிடுவோம் என ஈரான் பதில் மிரட்டல் விடுத்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவின் எரிவாயு இருப்பு மற்றும் விநியோகத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.
இந்த சூழ்நிலையில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு வழங்கப்படும் எல்பிஜி (LPG) சிலிண்டர்களின் அளவை தற்காலிகமாக குறைக்கும் திட்டத்தை பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் திட்டம்
தற்போது வீடுகளுக்கு வழங்கப்படும் 14.2 கிலோ எடையுடைய எல்பிஜி சிலிண்டர்களில், 10 கிலோ அளவிளான எரிவாயு மட்டுமே நிரப்பி விநியோகம் செய்யலாம் என் திட்டத்தை மத்திய அரசு ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம், குறைந்தளவில் உள்ள எரிவாயு கையிருப்பை அதிகப்படியான குடும்பங்களுக்கு பகிர்ந்து வழங்க முடியும் என்பதை இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கமாக உள்ளது.
எரிவாயு நிரப்பும் அளவு குறைக்கப்படுவது மூலம் கூடுதலாக குடும்பங்களுக்கு சேவை அளிக்க முடியும், இதேபோல் பற்றாக்குறை பிரச்சனையை எல்லை மீற காலம் தாழ்த்த முடியும்.
எண்ணெய் நிறுவனங்களின் மதிப்பீட்டின்படி, ஒரு சாதாரண 14.2 கிலோ சிலிண்டர் ஒரு குடும்பத்திற்கு 35 முதல் 40 நாட்கள் வரை பயன்படும். இதேபோல், 10 கிலோ சிலிண்டர் சுமார் ஒரு மாதத்திற்கு போதுமானதாக இருக்கும். இதனால், குறைந்த கையிருப்புகளுடன் கூட அதிக வீடுகளுக்கு விநியோகம் தொடர முடியும் என கணக்கிட்டு உள்ளது.
குறையும் கையிருப்பு, பாதிப்புக்குள்ளான இறக்குமதி
ஈரான் மோதலின் விளைவாக, வளைகுடா பகுதிகளில் இருந்து எல்பிஜி இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, Strait of Hormuz வழியாக வரும் கப்பல் போக்குவரத்து குறைந்துள்ளது. கடந்த வாரம் இந்த பாதை வழியாக இந்தியாவுக்கு பெரும் போராட்டித்திற்கு பின்பு, பேச்சுவார்த்தைக்கு பின்பு ஈரான் ராணுவம் இரண்டு எரிவாயு கப்பல்களை இந்தியாவுக்கு அனுப்ப அனுமதி அளித்தது.
இதன் மூலம் இந்தியாவுக்கு சுமார் 92,700 டன் எரிவாயுவை கொண்டு வரப்பட்டது. இது இந்தியாவின் ஒருநாள் தேவைக்கே சமமான அளவாகும். இதை தொடர்ந்து புதிய கப்பல்கள் எதுவும் தற்போது வரவில்லை, வரும் பாதையிலும் இல்லை என்பது வருத்தம் அளிக்கும் விஷயமாக உள்ளது.
வர்த்தக சிலிண்டர் பாதிப்பு
முதலில், வணிக பயனாளர்களுக்கு (Commercial users) எல்பிஜி விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஆனால் பின்னர், 40% வரை விநியோகம் மீண்டும் தொடங்கப்பட்டது. இதனால் வீட்டு பயன்பாட்டிற்கான கையிருப்பில் கூடுதல் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. தற்போது புதிய சப்ளையும் குறைந்துள்ளது, இதனால் நாளுக்கு நாள் பிரச்சனை அதிகரிக்க துவங்கியுள்ளது.
மேலும் எரிவாயு விநியோக நிலைமை குறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சக இணை செயலாளர் சுஜாதா சர்மா கூறுகையில் 'நிலைமை கவலைக்கிடமாக உள்ளது' என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். அதே சமயம், வீடுகளுக்கு விநியோகம் வழக்கம்போல நடைபெறுகிறது என அரசு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சிலிண்டர் அளவை குறைக்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டால், எடை குறைப்பை மக்களை மக்களுக்கு காட்டும் விதமாக புதிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட வேண்டும். மேலும், நிரப்பு நிலையங்களில் எடை கணக்கீட்டு அமைப்புகள் மாற்றப்பட வேண்டும். இதற்கு கூடுதல் ஒழுங்குமுறை அனுமதிகளும் தேவைப்படும்.
இதே நேரத்தில், திடீர் அளவு குறைப்பு பொதுமக்களிடையே குழப்பத்தையும், எதிர்ப்பையும் உருவாக்கக்கூடும் என அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக தேர்தல்கள் நெருங்கி வரும் மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்பிஜி சிலிண்டர் அளவு குறைக்கப்பட்டாலும், விலையும் அதற்கு ஏற்ப குறைக்கப்படும் என கூறப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போரால் இந்தியாவில் புது பிரச்சனை.. மருத்துவமனைகளில் ஷாக்.. என்ன நடக்குது?!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்தியாவுக்கு குட்நியூஸ்..!! ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் திடீரென மனம் இறங்கிய ஈரான்..!!

பங்குச்சந்தைய விடுங்க பிட்காயின் முதலீட்டாளர்கள் நிலைமை இன்னும் மோசம்..! ஈரான் போர் யாரையும் விட்டு வைக்கல..!

ஈரானுக்கு 48 மணி நேர கெடு விதித்த டிரம்ப்..!! பதிலுக்கு வஜ்ராயுதத்தை கையில் எடுத்த ஈரான்..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய கப்பல்களை அனுமதிக்க ஈரான் விதித்த நிபந்தனைகள்..? உண்மை என்ன?

சிலிண்டர் தட்டுப்பாடு: எவ்வளவு சொல்லியும் மக்கள் கேட்கவில்லை..!

இனி சிலிண்டர் புக் செய்து காத்திருக்க வேண்டாம்!! வந்துவிட்டது LPG ATM..!! 2 நிமிஷத்துல சிலிண்டர்..!!

குவைத் மீது ஈரான் திடீர் தாக்குதல்.. இஸ்ரேல்-க்கு பதிலடி.. பற்றி எரியும் கச்சா எண்ணெய் ஆலை..!!

புது வருடத்தில் ஈரானை திட்டமிட்டு தாக்கும் இஸ்ரேல்.. பெரும் சோகத்தில் ஈரான் மக்கள்..!

ஈரானில் அமெரிக்கா தரைவழி தாக்குதல்? பெரும் படைகளை அனுப்ப திட்டம்; 2 இடங்கள் தான் டார்கெட் என தகவல்



Click it and Unblock the Notifications