ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை மாற்றி அமைக்கும். சர்வதேச சந்தை நிலவரங்கள், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப சிலிண்டர் விலை மாற்றப்படுவது வாடிக்கை.
தற்போது ஈரான் போர் முடிவுக்கே வராமல் ஒரு மாதத்திற்கும் மேல் நீடிக்கிறது. இதனால் இந்தியாவுக்கு எல்பிஜி வரத்து நின்று போயுள்ளது. இந்தியா வளைகுடா நாடுகளை தவிர்த்து மாற்று ஆதாரங்களில் இருந்து எல்பிஜி மற்றும் கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இந்த சூழலில் எண்ணெய் நிறுவனங்கள் கேஸ் சிலிண்டர் விலைகளை மாற்றி அமைத்துள்ளன.

அந்த வகையில் இன்று முதல் சென்னையில் வணிக சிலிண்டரின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டிருக்கிறது. உணவகங்கள் மற்றும் டீக்கடைகள் போன்ற வணிக நோக்கத்தில் செயல்படக்கூடிய நிறுவனங்களுக்கு 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. இந்த சிலிண்டரின் விலை 2043.50 ரூபாயாக இருந்த நிலையில் 203 ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. எனவே இன்று முதல் வணிக சிலிண்டர் விலை 2246.50 ரூபாயாக மாற்றப்பட்டுள்ளது.
ஈரான் போர் நீடிப்பதன் காரணமாக இந்தியாவுக்கு எல்பிஜி வரத்து குறைந்து போயிருக்கிறது. இந்த சூழலில் வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி இருக்கின்றன. இது டீக்கடை மற்றும் உணவகங்கள் வைத்து நடத்தி வருபவர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்திருக்கிறது. ஏற்கனவே சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவகங்கள் டீக்கடைகளில் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டிருக்கின்றன.

இந்த சூழலில் சிலிண்டரின் விலையும் இந்த மாதத்தில் இருந்து உயர்த்தப்பட்டிருப்பதால் மேலும் பொருட்களின் விலை அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. சென்னையில் ஜனவரி ஒன்றாம் தேதி அன்று வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை 1849.50 ரூபாயாக தான் இருந்தது. அதுவே படிப்படியாக உயர்த்தப்பட்டு இன்றைய தினம் 2246.50 ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. அதாவது இந்த நான்கு மாதத்தில் சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை 397 ரூபாய் விலை உயர்வு கண்டிருக்கிறது.
அதே வேளையில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. சென்னையில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தக்கூடிய 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு கேஸ் சிலிண்டரின் விலை 928.50 ரூபாயாக தொடர்ந்து நீடிக்கிறது. எனவே இல்லத்தரசிகளுக்கு இந்த முறை பிரச்சினை இல்லை. சென்னையில் ஜனவரி 1ஆம் தேதி 868.50 ரூபாயாக இருந்த வீட்டு சிலிண்டர் விலை தற்போது 928.50 ரூபாயாக உள்ளது. ஈரான் போர் நீடிப்பதால் எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலைகளை உயர்த்தியுள்ளன. இந்த பதற்றம் தணிந்து நிலைமை சீரடையும் போது விலை குறைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
More From GoodReturns

மீண்டும் மண்ணெண்ணெய்..!! ஈரான் போர் நீடிப்பதால் மத்திய அரசு முக்கிய அறிவிப்பு..!!

LPG வாடிக்கையாளர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!! கேஸ் இணைப்பு துண்டிக்கப்படும் என அறிவிப்பு!!

ஈரான் மீது பங்கர்-பஸ்டர் குண்டு தாக்குதல்.. டிரம்ப் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு.. அதுவும் இந்த இடத்தில்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ஈரானுக்கு கடைசி வார்னிங்.. எண்ணெய் கிணறு தான் அடுத்த டார்கெட்.. டிரம்ப் பதிவால் ஷாக்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

அபாயகட்டத்தில் ஈரான் போர்..!! தரைவழி தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா..!!

அமெரிக்காவுக்கு ஈரான் தந்த ’ரகசிய பரிசு’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்..!!

5ஆவது வாரத்தில் ஈரான் போர்...!! அடுத்ததாக அமெரிக்காவின் நடவடிக்கை என்ன?

ஈரானை சீண்டும் டிரம்ப்.. மீண்டும் போர் தீவிரமாகுமா..?

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

நடுக்கடலில் டோல் பூத் வைத்த ஈரான்.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு.. உலக நாடுகள் பரிதவிப்பு..!



Click it and Unblock the Notifications

