வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று ரூ.918 வரை இன்றைக்கு விற்கப்படுகிறது. இந்நிலையில் பிரதம மந்திரி உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுக்கு ஒரு சமையல் எரிவாயு சிலிண்டரை ரூ.450க்கு மட்டும் வழங்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் மக்களுக்குப் பாதிக்குப் பாதி செலவு மிச்சமாகும். ஆனால் இந்த உத்தரவு தமிழ்நாட்டில் பிறப்பிக்கப்படவில்லை.

பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்ட பலன்தாரர்களுக்கு சமையல் எரிவாயு சிலிண்டரை ரூ.450க்கு வழங்க மத்தியப் பிரதேச மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் முக்கிய மந்திரி லட்லி பேஹ்னா யோஜனா பயனாளிகளுக்கும் இதேவிலையில் எரிவாயு சிலிண்டரை வழங்குவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் 1ஆம் தேதி முதல் இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச மாநில உணவு, சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன்படி தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு மாதந்தோறும் ஒரு எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும்.
கூடுதல் சிலிண்டர் தேவைப்படுவோர் எண்ணெய் நிறுவனம் நிர்ணயித்துள்ள விலையில் வாங்கி கொள்ளலாம். மத்திய அரசு தரும் மானியம் பயனாளிகளின் ஆதார் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுவிடும். இதற்கேப உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மாநில அரசு மாற்றி நிர்ணயித்துள்ளது.
முக்கிய மந்திரி லட்லி பேஹ்னா யோஜனா பயனாளிகள் எரிவாயு சிலிண்டர் இணைப்புகள் யோஜனா போர்ட்டலில் பதிவு செய்யப்படும். இதன்படி குடும்பத்தலைவிகள் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தினால் பயனடையலாம்.
இதற்கான பதிவு வேலைகள் முக்கியமந்திரி லட்லி பேஹ்னா யோஜனா திட்ட மையங்களில் நடைபெறும். இதற்கு சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பு எண், எல்பிஜி இணைப்பு ஐடி, முக்கிய மந்திரி லட்லி பேஹ்னா யோஜனா பதிவு அட்டை விவரங்களை அங்கு வழங்க வேண்டும்.
பிரதம மந்திரி உஜ்ஜாவ்லா யோஜனா திட்டப் பயனாளிகளுக்கு வழங்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விவரத்தை மாதாமாதம் மாநில உணவு, சிவில் சப்ளை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறைக்கு மாதந்தோறும் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனம் தெரிவிக்க வேண்டும். இதன்படி பயனாளிகளுக்கு மானியம் வழங்கப்படும்.
அந்த மானியத் தொகை பயனாளிகளின் ஆதார் இணைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்குக்கு எண்ணெய் நிறுவனங்கள் அனுப்பி வைக்க வேண்டும்.
பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா அல்லாத கேட்டரிகிரியை சேர்ந்தவர்களின் லட்லி பேஹ்னா பதிவு எண் விவரம் எண்ணெய் நிறுவனத்துக்கு மாநில அரசு தரும்.
மானியம் பெறுவதில் ஏதேனும் குறை இருந்தால் அதை நிவர்த்தி செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பம் உருவாக்கப்பட்டு பயனாளிக்கு வழங்கப்படும்.
More From GoodReturns

எல்பிஜி பற்றாக்குறை.. பிணங்கள் எரியூட்டு தகன மேடைகள் மூடப்பட்டது.. நிலைமை மோசமாகிறதா..?!

தீவிரமடையும் சிலிண்டர் தட்டுப்பாடு: அவசர ஆலோசனை நடத்திய மோடி.. கமிட்டி அமைத்த மத்திய அரசு..!!

தமிழ்நாட்டில் LPG சிலிண்டர் விலை ஏன் அதிகம்? மும்பை, டெல்லியை விட ரூ.15–ரூ.25 அதிகம்..!

பெங்களூரு வித்யார்த்தி பவன்-க்கு வந்த நிலைமையை பாத்தீங்களா..? மோசமாகும் எல்பிஜி பற்றாக்குறை பிரச்சனை..!!

மக்களே இனி ஹோட்டல் பக்கமே போக முடியாது!! ஈரான் போரால் பிரியாணி முதல் பரோட்டா வரை விலை மாற போகுது!!

சிலிண்டர் தட்டுப்பாடு: சென்னை, பெங்களூருவில் ஹோட்டல்கள் மூடல்!! அப்போ வீட்டு உபயோக சிலிண்டர் நிலைமை?

மோடி இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்க போகிறார்..? தேர்தல் நெருங்கும் நேரத்தில் பெரும் சவால்..!!

சிலிண்டர் தட்டுப்பாடு: ESMA சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசு!! இந்த தப்ப செஞ்சா 7 வருஷம் ஜெயில்!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!



Click it and Unblock the Notifications