இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாதமும் சிலிண்டர்களுக்காக விலையானது, சர்வதேச சந்தையில் நிலவி வரும் மாற்றத்திற்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் இன்று மாதத்தின் முதல் நாளான இன்று வணிக சிலிண்டரின் விலை மேலும் உயர்ந்துள்ளது.
குறிப்பாக சென்னையில் இந்த மாத்திற்கான வணிக சிலிண்டரின் விலை 102.50 ரூபாய் அதிகரித்து, 2508 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
2வது மாதமாக அதிகரிப்பு
கடந்த மாதமே 19 கிலோ எடையுள்ள வணிக சிலிண்டரின் விலையானது 100 ரூபாய் உயர்ந்த நிலையில், இந்த மாதமும் அதிகரித்துள்ளது. மாதத்திற்கு மாதம் தொடர்ந்து சிலிண்டரின் விலையானது, தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களை மேற்கொண்டு அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
பெட்ரோல் & டீசல் விலையும் அதிகரிப்பு
ஏற்கனவே பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது அதிகரித்து வரும் நிலையில், இதுவே நிறுவனங்களுக்கான செலவினத்தினை அதிகரித்துள்ளது. குறிப்பாக நிறுவனங்களுக்கான லாகிஸ்டிக்ஸ் செலவினங்களை உயர்த்தியுள்ளது. இந்த நிலையில் தற்போது சிலிண்டர் விலையும் தொடர்ந்து அதிகரித்துள்ளது மேற்கோண்டு பிரச்சனையாக அமையலாம்.
சிறு குறு நிறுவனங்கள் பாதிப்பு
இந்த விலையேற்றமானது சாமானிய மக்களை அதிகளவில் பாதிக்காவிட்டாலும், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை பாதிக்கும்.
இதே சமையல் எரிவாயு விலையானது பெரியளவில் மாற்றமின்றி 965.50 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எங்கு எவ்வளவு விலை?
டெல்லி - ரூ.2355.50
மும்பை - ரூ.2307
கொல்கத்தா - ரூ.2455
சென்னையில் - ரூ.2508
இதே தலை நகரில் 5 கிலோ சிலிண்டரின் விலையானது 655 ரூபாயாக உள்ளது.
என்ன காரணம்
இது கொரோனா பரவல், உக்ரைன் - ரஷ்யா இடையேயான பிரச்சனையானது, சர்வதேச எரிபொருள் விலையினை ஊக்குவித்து வருகின்றது. இது சப்ளை சங்கியிலில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக, விலை அதிகரித்துள்ளது.
More From GoodReturns

LPG வடிவில் வந்த முதல் ஷாக்.. அடுத்து பெட்ரோல் - டீசல்.. விலை உயர்வுக்கு உண்மையான காரணம் என்ன..?

தமிழ்நாட்டில் LPG சிலிண்டர் விலை ஏன் அதிகம்? மும்பை, டெல்லியை விட ரூ.15–ரூ.25 அதிகம்..!

பெங்களூரு வித்யார்த்தி பவன்-க்கு வந்த நிலைமையை பாத்தீங்களா..? மோசமாகும் எல்பிஜி பற்றாக்குறை பிரச்சனை..!!

மக்களே இனி ஹோட்டல் பக்கமே போக முடியாது!! ஈரான் போரால் பிரியாணி முதல் பரோட்டா வரை விலை மாற போகுது!!

சிலிண்டர் தட்டுப்பாடு: சென்னை, பெங்களூருவில் ஹோட்டல்கள் மூடல்!! அப்போ வீட்டு உபயோக சிலிண்டர் நிலைமை?

மோடி இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்க போகிறார்..? தேர்தல் நெருங்கும் நேரத்தில் பெரும் சவால்..!!

தீவிரமடையும் சிலிண்டர் தட்டுப்பாடு: அவசர ஆலோசனை நடத்திய மோடி.. கமிட்டி அமைத்த மத்திய அரசு..!!

சிலிண்டர் தட்டுப்பாடு: ESMA சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசு!! இந்த தப்ப செஞ்சா 7 வருஷம் ஜெயில்!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!



Click it and Unblock the Notifications