ஈரான் போர் நேரடியாகவே சாமானிய இந்தியர்களின் வாழ்க்கையிலேயே தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கிவிட்டது. போர் காரணமாக இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் வரத்து தடைப்பட்டு போயிருக்கிறது . இதனால் சிலிண்டர் விநியோகத்தில் பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.
எண்ணெய் நிறுவனங்கள் வணிக சிலிண்டர் விநியோகங்களை முற்றிலுமாக நிறுத்தி வைத்திருக்கின்றன. எனவே சென்னை, பெங்களூர், மும்பை என பல்வேறு நகரங்களிலும் உணவகங்கள் இன்றிலிருந்து மூடப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. எல்பிஜி சிலிண்டர் விலை விநியோகத்தை நிறுவனங்கள் நிறுத்தி வைத்திருப்பதன் காரணமாக ஹோட்டல்களை மூடுவதாக சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களை சேர்ந்த ஹோட்டல் சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றன.

திடீரென ஹோட்டல்கள் மூடப்படுவது நகரங்களில் வசிக்கக்கூடிய லட்சக்கணக்கான மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக விடுதிகளில் தங்கி இருப்பவர்கள், பேச்சுலர்கள் , உணவகங்களில் கிடைக்கக்கூடிய உணவுகளை மட்டுமே நம்பி இருக்கக்கூடிய பலரும் இதன் காரணமாக பாதிக்கப்பட இருக்கின்றனர். சிலிண்டர் கிடைக்காத உணவகங்கள் மூடப்படும் நிலையில் கையிருப்பில் இருக்கும் சிலிண்டர்களை வைத்து சில உணவகங்கள் மட்டுமே செயல்படும் சூழல் உண்டாகியுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் தான் எண்ணெய் நிறுவனங்கள் வணிக சிலிண்டர் விலையை திடீரென உயர்த்தின. 19 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டர் விலையை 115 ரூபாய் வரை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின. எண்ணெய் விநியோக நிறுவனங்கள் கடந்த 3 மாதங்களில் 193 ரூபாய் வரை வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலையை உயர்த்திவிட்டன. அது மட்டும் இல்லாமல் உணவகங்களுக்கு தள்ளுபடி விலையில் சிலிண்டர் சிலிண்டர் வழங்குவதையும் மார்ச் 1 முதல் நிறுத்தி கொண்டன. இதன் காரணமாக கள்ள சந்தையில் சிலிண்டர் டிமாண்ட் அதிகரித்திருக்கிறதாம்.

கடந்த வாரம் 2000 ரூபாய்க்கு கிடைத்த சிலிண்டர் இந்த வாரம் 3000 என விலை உயர்ந்துவிட்டதாம். சிலிண்டர் விலை உயர்வு, சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக ஏற்பட்டுள்ள விலை சுமையை உணவக உரிமையாளர்கள் வாடிக்கையாளர்கள் மீது தான் சுமத்துவார்கள் என சொல்லப்படுகிறது.
சிலிண்டர் தட்டுப்பாட்டால் உணவகங்கள் மூடப்பட்டு இருக்கக்கூடிய நிலையில் , சில உணவகங்கள் தங்கள் கையிருப்பில் இருக்கக்கூடிய சிலிண்டர்களை வைத்து உணவு விற்பனை செய்கின்றன. சப்ளை குறைந்து டிமாண்ட் அதிகமாக இருப்பதால் பிரியாணி தொடங்கி பரோட்டா வரை பல்வேறு உணவுகளின் விலை உயர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் 150 ரூபாய்க்கு விற்பனையாக கூடிய பிரியாணி விலை 200 ரூபாயாக விலை உயர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. மற்ற உணவுகளுக்கும் இதேதான் நிலை.
ஸ்விக்கி, சோமேட்டோ தளங்களிலும் available hotelகளின் எண்ணிக்கை குறையும். எனவே ஹோட்டல் உணவுகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட போகிறது. சிலிண்டர் தட்டுப்பாடு பிரச்சனை இன்னும் பத்து நாட்களுக்கு மேல் நீடிக்கும் பட்சத்தில் அடுத்ததாக டீ, காபி உள்ளிட்டவற்றின் விலையும் உயரும் வாய்ப்பிருக்கிறது.
More From GoodReturns

சிலிண்டர் தட்டுப்பாடு: சென்னை, பெங்களூருவில் ஹோட்டல்கள் மூடல்!! அப்போ வீட்டு உபயோக சிலிண்டர் நிலைமை?

மோடி இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்க போகிறார்..? தேர்தல் நெருங்கும் நேரத்தில் பெரும் சவால்..!!

LPG வடிவில் வந்த முதல் ஷாக்.. அடுத்து பெட்ரோல் - டீசல்.. விலை உயர்வுக்கு உண்மையான காரணம் என்ன..?

தமிழ்நாட்டில் LPG சிலிண்டர் விலை ஏன் அதிகம்? மும்பை, டெல்லியை விட ரூ.15–ரூ.25 அதிகம்..!

எல்பிஜி பற்றாக்குறை.. பிணங்கள் எரியூட்டு தகன மேடைகள் மூடப்பட்டது.. நிலைமை மோசமாகிறதா..?!

எல்பிஜி சிலிண்டர் சப்ளை கட்.. ஹோட்டல்களை மூட வேண்டிய நிலை.. மீண்டும் விறகு அடுப்புக்கு செல்ல வேண்டுமா..?!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications

