உலக நாடுகள் மத்தியில் இந்தியா முக்கிய முதலீடு மற்றும் வர்த்தக சந்தையாக மாறியுள்ளது. இந்த நிலையில் பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையிலும், நேரடியாக வர்த்தக சந்தையிலும் முதலீடு செய்து வருகின்றனர்.
கேரளாவில் இருந்து ஐக்கிய அரபு நாடுகளுக்கு சென்ற யூசப் அலி மாபெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியது மட்டுமல்லாமல் கேரளாவில் ஏற்கனவே பல ஷாப்பிங் மால்களை கட்டியிருக்கும் வேளையில், கடந்த 2 வருடத்தில் பெங்களூர், கோயம்புத்தூர், அடுத்தது சென்னை என நாட்டின் முக்கிய நகரங்களில் அடுத்தது மால்களை லூலூ குரூப் திறந்து வருகிறது.

யூசப் அலி இந்தியாவை சேர்ந்தவராக இருந்தாலும் ஐக்கிய அரபு நாட்டில் தனது வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை வைத்திருக்கிறார். இந்த நிலையில் ஐக்கிய அரபு நாடுகளின் லூலூ குரூப் அடுத்த 3 வருடத்தில் புதிதாக 10000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. சமீபத்தில் கோயம்புத்தூரில் திறக்கப்பட்ட மால் மக்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பை பெற்றது.
இந்தியாவில் லூலூ குருப் இதுவரையில் 20000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள நிலையில், இப்புதிய அறிவிப்பு மூலம் புதிதாக 10000 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது எம்ஏ யூசப் அலி தலைமையிலான நிர்வாகம்.
லூலூ குரூப் தெலுங்கானா, அகமதாபாத், உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் புதிய கட்டமைப்புகளை உருவாக்கி வருகிறது. இதன் வாயிலாக இந்தியாவில் சுமார் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியும் என லூலூ குரூப் நம்புகிறது.
இதேவேளையில் லூலூ குரூப் இந்தியாவில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது இதன் மூலம் சுமார் 22,000 வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளது எனவும் எம்ஏ யூசப் அலி தெரிவித்துள்ளார். மேலும் ஆகஸ்ட் மாதத்தில் 5 லட்சம் சதுரடியில் கட்டப்பட்டு உள்ள மாபெரும் லூலூ மால் திறக்கப்பட உள்ளது.
இதுமட்டும் அல்லாமல் இந்தியா - ஐக்கிய அரபு நாடுகள் மத்தியிலான ஏற்றுமதியை மேம்படுத்த, இந்தியாவில் அமைக்கப்பட உள்ள ஏற்றுமதிக்கான meat processing plant-ன் கட்டுமான பணிகள் விரைவில் முடிக்கப்பட உள்ளது.
மேலும் லூலு குரூப் அடுத்த 5 வருடத்தில் 3500 கோடி ரூபாய் அளவிலான தொகையை தெலுங்கானாவில் முதலீடு செய்யப்பட உள்ளது. இதில் ஷாப்பிங் மால் கட்டுமானத்திற்கு மட்டுமே 3000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது லூலூ குரூப்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications