ரூ.200 கோடி மதிப்பிலான கேரளாவில் உள்ள ஆடம்பரமான 7 நட்சத்திர ரிசார்ட் CRZ விதிகளை மீறியதற்காக இடிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்டியதால் 7 ஸ்டார் ரிசார்ட் கட்டிடம் ஒன்று இடிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நொய்டாவில் இரட்டை கோபுரம் இடிக்கப்பட்ட நிலையில் அதே போன்ற ஒரு சம்பவம் விரைவில் கேரளாவில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அரசு புறம்போக்கு நிலம்
கபிகோ கேரளா ரிசார்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அரசு பொரம்போக்கு நிலத்தின் ஒரு பகுதியை ஆக்கிரமிப்பு செய்ததாக குற்றஞ்சாட்டிய நிலையில் கேரள அரசு சமீபத்தில் அந்த நிலத்தை கையகப்படுத்தியது.
இடிக்கும் பணி
ரிசார்ட் குழுவால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை கையகப்படுத்திய ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் கிருஷ்ண தேஜா, அந்த நிலத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தை இடிப்பதற்கான செயல் திட்டத்தை நிர்வாகம் உள்ளூர் பஞ்சாயத்திடம் சமர்ப்பிக்கப்படும் என்று கூறியுள்ளார். இந்த செயல் திட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் இறுதி ஒப்புதல் அளித்த பிறகு ஒரு வாரத்தில் அந்த ரிசார்ட்டை இடிக்கும் பணி தொடங்கும் என்று கூறப்படுகிறது
ஆடம்பர வில்லாக்கள்
கையகப்படுத்தப்பட்ட 7 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இடம் பனவல்லி கிராம ஊராட்சிக்கு உட்பட்டது என்றும், இதில் 54 ஆடம்பரமான வில்லாக்கள் கடந்த 2007ஆம் கட்டப்பட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த வில்லாக்களின் இன்றைய மதிப்பு ரூ.200 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
இதுகுறித்து கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் கடந்த 2013ஆம் ஆண்டு இந்த கட்டிடங்களை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த நிலையில் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.
கொச்சி அடுக்குமாடி கட்டிடம்
முன்னதாக 2020 ஆம் ஆண்டில், கேரளாவில் உள்ள கொச்சியில் வேம்பநாடு உப்பங்கழிக்கு அருகில் உள்ள நான்கு அடுக்குமாடி குடியிருப்புகள் சுற்றுச்சூழல் விதிமுறைகளை மீறியதற்காக உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி இடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications