இந்தியாவில் சமீபகாலமாக அனைத்து முதலீடுகளிலும் அதிகப்படியான தடுமாற்றம் ஏற்படும் வேளையில் மீண்டும் ரியல் எஸ்டேட் மற்றும் தங்கம் முக்கிய முதலீடாக மாறி வருகிறது. தங்கம் விலையில் ஏற்படும் வளர்ச்சியும் 4-5 சதவீதமாகவே இருக்கும் காரணத்தால் தற்போது இந்தியாவில் இருக்கும் பெரும் பணக்காரர்களுக்கு ரியல் எஸ்டேட் முதலீடுகள் முக்கியமான தேர்வாக உள்ளது.
ரியல் எஸ்டேட் முதலீடுகள் காலம் காலமாக இருப்பது தானே என நினைக்கலாம், ஆனால் கடந்த 3-5 வருடத்தில் இந்தியாவில் ஆடம்பர வீடுகளின் விற்பனையின் வேகம் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு வளர்ந்துள்ளது. குறிப்பாக நாட்டின் பெரு நகரங்களில் ஆடம்பர கட்டுமான திட்டங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது மட்டும் அல்லாமல் வேகமாகவும் விற்பனையாகி வருகிறது.

இந்தியாவில் டாப் 7 பெரு நகரங்களில் 2023 ஆம் ஆண்டின் ஜனவரி - செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் மட்டுமே சுமார் 84,400 ஆடம்பர வீடுகள் விற்பனையாகியுள்ளது. 2022 ஆம் ஆண்டின் இதே காலக்கட்டத்தில் வெறும் 39,300 வீடுகள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. இது கிட்டதட்ட டபுள் மடங்கு வளர்ச்சி.
டெல்லி-என்சிஆர், மும்பை மண்டலம், பெங்களூரு, புனே, ஹைதராபாத், சென்னை மற்றும் கொல்கத்தா ஆகிய டாப் 7 பெரு நகரங்களில் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 3.49 லட்சம் வீடுகள் விற்பனையாகியுள்ளது. இதில் 84,400 வீடுகள் ஆடம்பர வீடுகள், இது மொத்த விற்பனையில் சுமார் 24 சதவீதமாகும். இதைவிட முக்கியமாந விஷயம் அந்த 84,400 வீடுகளின் ஆடம்பர விலையே 1.5 கோடி ரூபாய் தான்.
இந்த 9 மாத காலக்கட்டத்தில் சென்னையில் மட்டும் 3,330 ஆடம்பர வீடுகள் விற்கப்பட்டு கடந்த வருடத்தை காட்டிலும் 143 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதேபோல் டெல்லி என்சிஆர் பகுதியில் 119 சதவீதமும், மும்பை-யில் 74 சதவீதமும், பெங்களூரில் 142 சதவீதமும், புனே-வில் 191 சதவீதமும், ஹைதராபாத்தில் 260 சதவீதமும், கொல்கத்தாவில் 69 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, ஹைதராபாத் நகரத்தில் பதிவான 260 சதவீத வளர்ச்சி தான். இந்நகரத்தில் எப்போதும் இல்லாத வகையில் ஆடம்பர வீடுகள் விற்பனையாகியுள்ளது மட்டும் அல்லாமல் புதிதாக துவங்கப்பட்டு உள்ள பெரும்பாலான திட்டங்கள் அனைத்தும் ஆடம்பர திட்டங்களாக உள்ளது.
More From GoodReturns

பெங்களூருவில் வீடு வாங்கி லாபம் பார்க்கணுமா? இந்த ஏரியால தான் செம வளர்ச்சி!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications