ஏப்ரல் 1 முதல் 'இங்கு' மது விற்பனைக்கு தடை.. அரசின் அதிரடி அறிவிப்பு..!

மத்திய பிரதேச அரசு மதுவிலக்கினை படிப்படியாக அமல்படுத்த திட்டமிட்டிருக்கும் நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மது விற்பனையில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வர இருக்கிறது. இதன்படி மத்திய பிரதேச மாநிலத்தில் புனித தலங்கள் அமைந்துள்ள 17 இடங்கள் உட்பட 19 இடங்களில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 1 முதல் 'இங்கு' மது விற்பனைக்கு தடை.. அரசின் அதிரடி அறிவிப்பு..!

ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து மத்திய பிரதேச மாநிலத்தில் குறைந்த அளவு ஆல்கஹால் கலந்த பானங்களை மட்டுமே விற்பனை செய்யக்கூடிய பார்கள் செயல்படும் என்றும், 19 இடங்களில் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய பிரதேச மாநில அரசு வெளியிட்டுள்ள புதிய மதுபான கொள்கையில் 10 சதவீதம் என்ற அளவில் ஆல்கஹால் கலந்த பீர், ஒயின் உள்ளிட்ட மதுபானங்கள் மட்டுமே புதிய மதுபான பார்களில் விற்பனைக்கு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் 470 மதுபான பார்கள் பயன்பாட்டில் செயல்பாட்டில் இருக்கின்றன .இந்த பார்களில் குறைந்த ஆல்கஹால் கொண்ட மதுபானங்கள் மட்டுமே விற்பனைக்கு வரும் என சொல்லப்படுகிறது.

இந்த புதிய விதிமுறைகளின் படி புனித தலங்கள் கொண்ட 19 இடங்களில் செயல்படும் 47 மதுபான கடைகள் மூடப்பட உள்ளன . உஜ்ஜெயின், மகேஸ்வர், மண்டலகேசுவரர், சித்ரகுத், தாடியா உள்ளிட்ட பகுதிகள் இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 19 இடங்களில் உள்ள மதுவிற்பனை கடைகள் மூடப்படுவதால் தங்கள் மாநில அரசுக்கு 450 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் என முதலமைச்சர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.

ஆனால் மதுவிற்பனை தடை செய்யப்பட்ட நகரங்களில் இருப்பவர்கள் வெளியிலிருந்து மதுபானம் வாங்கி வந்து தனி நபராக அருந்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முற்றிலும் மதுவிலக்கு இங்கே அமல்படுத்தப்படவில்லை என்றும் மது விற்பனை தான் தடை செய்யப்பட்டுள்ளது என்றும் மத்தியபிரதேச மாநில அரசு கூறியுள்ளது. கூடிய விரைவில் இந்த பகுதிகளில் முழுமையான மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றும் சொல்லப்படுகிறது.

அதே வேளையில் இதனால் தங்கள் மாநிலத்தின் ஒயின் உற்பத்தி பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது. விவசாயிகளின் வருமானத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஒயின் தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு உட்பட்ட பகுதியிலேயே சில்லறை விற்பனை நிலையங்களையும் தொடங்க அனுமதி தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திராட்சை மட்டுமில்லாமல் மற்ற பழங்களில் இருந்தும் ஒயின் உற்பத்தி செய்வதற்கு விவசாயிகள் ஊக்குவிக்கப்படுவார்களாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+