நரேந்திர மோடி அடிக்கல் நாட்டிய மதுரை AIIMS மருத்துவமனையின் கட்டுமான பணிகள் நீண்ட தாமதத்திற்குப் பிறகு மார்ச் மாதம் துவங்கியது. இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான சாம்ராஜ்ஜியமான லார்சன் & டூப்ரோ நிறுவனம் இந்த மாபெரும் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது. இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் கல்லூரி கட்டுமானம் குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது, குறிப்பாகக் கட்டுமானத்தின் புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.
மதுரையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எய்ம்ஸ் கட்டுமான பணிகள் இறுதியாகத் தீவிரமடைந்துள்ளன. லார்சன் & டூப்ரோ நிறுவனத்தால் (L&T) ரூ.1,978 கோடி மதிப்பில் இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 720 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைக்கப்படவுள்ளது.

நரேந்திர மோடி அவர்கள் 2019 ஆம் ஆண்டில் இதற்கான அடிக்கல் நாட்டினார். ஆனால், பல்வேறு காரணங்களால் திட்டப்பணிகள் தாமதமாயின, குறிப்பாக கோவிட்-19 பெருந்தொற்று, மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு மற்றும் அலுவல் சார்ந்த சிக்கல்களே இதற்கு முக்கிய காரணங்கள் என்று கருதப்படுகிறது.

இருப்பினும், இந்த ஆண்டு மார்ச் மாதம் திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்த பின்னர், வாஸ்து பூஜை செய்து கட்டுமான பணிகள் வேகமெடுத்துள்ளன. Larsen & Toubro நிறுவனம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. மொத்த திட்ட பரப்பளவில் 2,31,782 சதுர மீட்டர் பரப்பளவில் 42 கட்டடங்கள் கட்டப்படவுள்ளன.

மதுரை எய்ம்ஸ் திறக்கப்பட்ட பிறகு, தென் தமிழ்நாடு மக்களுக்கு தரமான மருத்துவ வசதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, புற்றுநோய், இருதய நோய் போன்ற சிக்கலான நோய்களுக்கான சிகிச்சை மேம்பட்ட தரத்தில் எளிதாக கிடைக்கும். மருத்துவமனை தவிர்த்து, மருத்துவக் கல்லூரி, செவிலியர் கல்லூரி, ஆய்வகங்கள், மாணவர் விடுதிகள், ஊழியர் குடியிருப்புகள் போன்றவையும் இத்திட்டத்தில் அடங்கும்.

லார்சன் & டூப்ரோ நிறுவனம் மதுரை AIIMS கட்டுமானத்தை சுமார் 33 மாதங்களில் கட்டி முடிக்கப்படவுள்ளது. இந்த புதிய வளாகத்தில், 1,08,325 சதுர மீட்டர் பரப்பளவில் 870 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை கட்டிடம் (வெளி நோயாளர் பிரிவு, அவசர சிகிச்சைப் பிரிவு உட்பட), ஆயுஷ் பிரிவு, கற்பித்தல் பிரிவு, 750 இருக்கைகளைக் கொண்ட அரங்கம், கான்பிரென்ஸ் அரங்கங்கள், பெண்கள் மற்றும் ஆண்களுக்கான தனி விடுதிகள், பணியாளர் பகுதி, AIIMS இயக்குநர் இல்லம், பேராசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கான குடியிருப்பு வளாகங்கள் என மொத்தம் 42 கட்டிடம் இந்த மாபெரும் திட்டத்தில் இடம்பெறவுள்ளன.
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (ஜிகா) நிதியுதவியுடன் ரூ.1,978 கோடி மொத்த செலவில் மதுரையில் இருந்து 13 கி.மீ தொலைவில் உள்ள தொப்பூர் பகுதியில் AIIMS வளாகம் கட்டப்படவுள்ளது. AIIMS மதுரை மருத்துவக் கல்லூரி தற்காலிகமாக ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

Madurai Gold Rate Today: ரூ.655 சரிவு – அடுத்த பெரிய உயர்வுக்கு முன் வாங்கலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications