வீட்டு வாசலில் உணவு டெலிவரி செய்யப்படுமானால், ஏன் தரமான மருத்துவ வசதிகள் வீட்டு வாசலில் கொடுக்க முடியாது? இந்த கேள்வி கேட்பதற்கு எளிதாக இருந்தாலும், நடைமுறையில் அதிகப்படியான சவால்கள் உள்ளது. ஆனால் இதை அனைத்தையும் டாக்டர் சி.சுவாமிநாதன் உடைத்து எறிந்துள்ளார்.
2019 ஆம் ஆண்டிலேயே டாக்டர் சி.சுவாமிநாதன் மதுரையில் 'Doctor on Wheels' என்ற பெயரில் நோயாளிகளுக்கு அவர்களின் வீட்டு வாசலில் மருத்துவ சேவைகளை வழங்குவதற்கான ஒரு முயற்சியை எடுத்தார்.

கனடாவில் பிறந்து வளர்ந்த சுவாமிநாதன் மருத்துவத்தில் மேற்படிப்புக்காக இந்தியா வந்தார். 2015 ஆம் ஆண்டில், தனது எம்பிபிஎஸ் மற்றும் அவசர மருத்துவ பிரிவில் முதுகலை முடித்த பிறகு, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் ஜூனியர் ஆலோசகராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார்.
ஆனால் டாக்டர் சி.சுவாமிநாதன் அவர்களுக்கு கார்ப்பரேட் வேலை தனக்கானது இல்லை என்பதை உணர்ந்ததாகவும், தான் மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவையை வழங்க விரும்பியதாகவும் பிரபல பத்திரிக்கை உடனான பேட்டியில் தெரிவித்தார்.
டாக்டர் சி.சுவாமிநாதன் தனியார் மருத்துவக் கல்லூரியில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய போது பலரிடம் பேசும் போது, அவர்கள் கூறிய முக்கிய பிரச்சனைகளில் ஒன்று நோயாளிகளை வீட்டில் இருந்து மருத்துவமனை படுக்கைக்கு மாற்றுவதில் அதிகப்படியான பிரச்சனை இருப்பது தான்.
இதில் இருந்து உருவான ஐடியா தான் Doctor on Wheels, முதலில் டாக்டர் சி.சுவாமிநாதன் மாருதி ஈகோ கார்-ஐ ஆம்புலென்ஸ் ஆக மாற்றி பல்வேறு சேவைகளை அதற்குள்ளேயே கொண்டு வந்தார். இந்த சேவை வயதானவர்கள், ஊனமுற்றவர்கள், ஊனமுற்ற குழந்தைகளுக்கு பெரிய அளவில் உதவும், அதேபோல் மருத்துவமனை செலவும் பெரிய அளவில் குறைக்க முடியும் என டாக்டர் சி.சுவாமிநாதன் நம்பினார்.
இந்த சேவை அறிமுகம் செய்த கடந்த 3 வருடத்தில் 25000 நோயாளிகளுக்கு தேவை அளிக்கிறது இந்த வாகனம், ஒரு நாளுக்கு குறைந்தது 25 அழைப்புகள் வருகிறது, தினமும் 60 கிலோமீட்டர் பயணிக்கிறது.
More From GoodReturns

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!

Madurai Gold Rate Today: ரூ.655 சரிவு – அடுத்த பெரிய உயர்வுக்கு முன் வாங்கலாமா?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications