வீட்டு வாசலில் உணவு டெலிவரி செய்யப்படுமானால், ஏன் தரமான மருத்துவ வசதிகள் வீட்டு வாசலில் கொடுக்க முடியாது? இந்த கேள்வி கேட்பதற்கு எளிதாக இருந்தாலும், நடைமுறையில் அதிகப்படியான சவால்கள் உள்ளது. ஆனால் இதை அனைத்தையும் டாக்டர் சி.சுவாமிநாதன் உடைத்து எறிந்துள்ளார்.
2019 ஆம் ஆண்டிலேயே டாக்டர் சி.சுவாமிநாதன் மதுரையில் 'Doctor on Wheels' என்ற பெயரில் நோயாளிகளுக்கு அவர்களின் வீட்டு வாசலில் மருத்துவ சேவைகளை வழங்குவதற்கான ஒரு முயற்சியை எடுத்தார்.

கனடாவில் பிறந்து வளர்ந்த சுவாமிநாதன் மருத்துவத்தில் மேற்படிப்புக்காக இந்தியா வந்தார். 2015 ஆம் ஆண்டில், தனது எம்பிபிஎஸ் மற்றும் அவசர மருத்துவ பிரிவில் முதுகலை முடித்த பிறகு, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் ஜூனியர் ஆலோசகராக ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார்.
ஆனால் டாக்டர் சி.சுவாமிநாதன் அவர்களுக்கு கார்ப்பரேட் வேலை தனக்கானது இல்லை என்பதை உணர்ந்ததாகவும், தான் மக்களுக்கு சிறந்த மருத்துவ சேவையை வழங்க விரும்பியதாகவும் பிரபல பத்திரிக்கை உடனான பேட்டியில் தெரிவித்தார்.
டாக்டர் சி.சுவாமிநாதன் தனியார் மருத்துவக் கல்லூரியில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய போது பலரிடம் பேசும் போது, அவர்கள் கூறிய முக்கிய பிரச்சனைகளில் ஒன்று நோயாளிகளை வீட்டில் இருந்து மருத்துவமனை படுக்கைக்கு மாற்றுவதில் அதிகப்படியான பிரச்சனை இருப்பது தான்.
இதில் இருந்து உருவான ஐடியா தான் Doctor on Wheels, முதலில் டாக்டர் சி.சுவாமிநாதன் மாருதி ஈகோ கார்-ஐ ஆம்புலென்ஸ் ஆக மாற்றி பல்வேறு சேவைகளை அதற்குள்ளேயே கொண்டு வந்தார். இந்த சேவை வயதானவர்கள், ஊனமுற்றவர்கள், ஊனமுற்ற குழந்தைகளுக்கு பெரிய அளவில் உதவும், அதேபோல் மருத்துவமனை செலவும் பெரிய அளவில் குறைக்க முடியும் என டாக்டர் சி.சுவாமிநாதன் நம்பினார்.
இந்த சேவை அறிமுகம் செய்த கடந்த 3 வருடத்தில் 25000 நோயாளிகளுக்கு தேவை அளிக்கிறது இந்த வாகனம், ஒரு நாளுக்கு குறைந்தது 25 அழைப்புகள் வருகிறது, தினமும் 60 கிலோமீட்டர் பயணிக்கிறது.
More From GoodReturns

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications