மதுரையில் முருங்கை ஏற்றுமதிக்கான சிறப்பு மையம்.. முருங்கை இலை பொடிக்கு இவ்வளவு டிமாண்ட்டா?

மதுரை: தமிழ்நாட்டில் முருங்கை சார்ந்த பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் மதுரையில் முருங்கை சிறப்பு ஏற்றுமதி சேவை மையம் நிறுவப்பட்டுள்ளது.

சர்வதேச முருங்கை பொருட்கள் சந்தையில் தமிழ்நாட்டை முன்னிலைக்கு கொண்டு வரும் நோக்கில் இந்த முருங்கை ஏற்றுமதி மையத்தை நிறுவியிருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. உலக அளவில் தேவைப்படக்கூடிய 80 சதவீத முருங்கைக்காய் மற்றும் முருங்கை இலை உள்ளிட்டவை இந்தியாவிலிருந்து தான் உற்பத்தி செய்யப்படுகின்றன.

மதுரையில் முருங்கை ஏற்றுமதிக்கான சிறப்பு மையம்.. முருங்கை இலை பொடிக்கு இவ்வளவு டிமாண்ட்டா?

அந்த வகையில் இந்தியாவில் முருங்கை பொருட்கள் உற்பத்தியில் முன்னணியில் இருப்பது தமிழ் நாடு தான். 2023 -24 ஆம் நிதியாண்டின் தரவுகளின் படி தமிழ்நாடு ஒரு ஆண்டில் 20 ,741 ஹெக்டர் பரப்பளவுக்கு முருங்கை மரங்களை கொண்டுள்ளது, இதன் மூலம் ஓராண்டுக்கு 8, 41,087 டன்கள் முருங்கைகாய் மற்றும் பிற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்கிறது.

சர்வதேச அளவில் முருங்கைக்காய் மற்றும் முருங்கை இலை பவுடர் உள்ளிட்டவற்றுக்கான டிமாண்ட் அதிகரித்திருப்பதால் தமிழ்நாடு அரசு மதுரையில் முருங்கை ஏற்றுமதிக்கான சிறப்பு மையத்தை நிறுவி இருக்கிறது. 2025 ஆம் ஆண்டு சர்வதேச அளவிலான முருங்கை ஏற்றுமதி சந்தையின் மதிப்பு 1000 கோடி ரூபாயை எட்டும் என கணிக்கப்படுகிறது. இதில் முருங்கை இலை பவுடருக்கான சந்தை மட்டுமே 600 கோடி ரூபாய் மதிப்புக்கு உயரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தேவையை பூர்த்தி செய்வதற்கு 11 ,000 ஏக்கர் பரப்பளவில் முருங்கை இலை சாகுபடி செய்ய வேண்டும். தமிழ்நாட்டை பொறுத்தவரை தற்போது 35 ஏற்றுமதி நிறுவனங்கள் 600இல் இருந்து 800 ஏக்கர் பரப்பளவுக்கு முருங்கை சாகுபடியில் ஈடுபட்டு இருக்கின்றன. இந்த நிறுவனங்கள் ஒரு ஆண்டுக்கு 720 டன்கள் முருங்கை இலை பவுடரை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கின்றன. இவற்றின் மதிப்பு 30 கோடி ரூபாய் ஆகும். இந்த பிரிவில் தமிழ்நாடு இன்னும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு முருங்கை சாகுபடி மற்றும் அவற்றை அவற்றை மதிப்பு கூட்டி ஏற்றுமதி செய்வதற்கான உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகளை துவங்கியுள்ளது.

தமிழ்நாடு அரசின் TNAPEx நிறுவனம் தமிழ்நாட்டில் முருங்கை சாகுபடியில் ஈடுபட்டிருக்கும் நபர்கள் அதனை எப்படி மதிப்பு கூட்டும் பொருட்களாக மாற்றி ஏற்றுமதி செய்யலாம், அதற்கு என்னென்ன வசதிகள் தேவை என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. விவசாயிகளும் ஏற்றுமதி தொழிலில் ஆர்வம் இருப்பவர்களும் தங்களை தொடர்பு கொள்ளலாம் என TNAPEx அறிவித்துள்ளது. புதிதாக தொழில் தொடங்க ஆர்வம் இருப்பவர்கள் கட்டாயம் இதற்கு முயற்சி செய்யலாம் என சொல்லப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+