இன்று தாக்கல் செய்யப்பட்ட 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் பல முக்கிய வளர்ச்சி திட்டங்களும், நல திட்டங்களும் அறிவிக்கப்பட்டாலும், தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை கணிக்கப்பட்டதைக் காட்டிலும் பெரிய அளவில் உயர்ந்துள்ளது சோகமான விஷயமாக உள்ளது.
2023-24க்கான திருத்தப்பட்ட அளவான 44,907 கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில், 2024-25ல், 49,279 கோடி ரூபாயாக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அறிவித்தார். தமிழ்நாட்டின் மின்சாரப் பிரிவான TANGEDCO-வின் கூடுதல் செலவுகளைத் தமிழ்நாடு அரசு ஈடுசெய்து வருவது தான், இந்த நிலைக்கு முக்கியமான காரணமாகும்.

இந்த நிலையில் மதுரை, திருச்சி, தூத்துக்குடி மாவட்டத்திற்கு என்னென்ன அறிவிப்புகள் வந்துள்ளது என வேகமாக ஒரு ரவுண்ட் பார்ப்போம்.
மதுரைக்கு கிடைத்த முக்கிய திட்டங்களும் அறிவிப்புகளும்:
தமிழ்நாட்டில் இணைய வசதி மேம்படுத்தும் நோக்கில் அரசு 5 மாவட்டத்தில் சுமார் 1,000 இடங்களில் இலவச வை-பை சேவை வழங்கப்படும் என அறிவித்துள்ளது, இதில் மதுரை மாவட்டமும் உள்ளது.
மதுரை மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் மெட்ரோ ரெயில் திட்டங்கள், மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு அரசிடம் தெரிவித்துள்ளது. இதில் கோயம்புத்தூர் மெட்ரோ ரயில் திட்டமும் உள்ளது.
மதுரையில் தொழில் புத்தாக்க மையம் அமைக்கப்படும். மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு ஆகிய நகரங்களில் நதிகளை மீட்டெடுக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்
சென்னை, திருச்சி, மதுரை, நீலகிரியில் 4 ஒலிம்பிக் பயிற்சி மையங்கள் நிறுவப்படும் - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். மதுரையில் 25,00 சதுர அடியில் தொழில் புத்தாக்க மையம் அமைக்கப்படும்ய
சென்னை, கோவை, மதுரை மாவட்டங்களில் 3 தோழி விடுதிகள் அமைக்கப்படும். மதுரை, சேலத்தில் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.
திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட ஆவின் தொழிற்சாலைகளில் அதிநவீன தானியங்கி இயந்திரங்கள் அமைக்கப்படும். கோவை, மதுரையில் உலகளாவிய திறன் மேம்பாட்டு மையம் அமைக்கப்படும். மதுரையில் ரூ.345 கோடியில் டைடல் பூங்கா அமைக்கப்படும்.
திருச்சி - முக்கிய திட்டங்களும் அறிவிப்புகளும்:
திருச்சி, திருவெறும்பூர் பகுதியில் நவீன பாதுகாப்பு வசதியுடன் புதிய சிறைச்சாலை அமைக்கப்படும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட் தாக்கலின் போது தெரிவித்தார்.
மதுரை, சேலத்தில் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும். திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட ஆவின் தொழிற்சாலைகளில் அதிநவீன தானியங்கி இயந்திரங்கள் அமைக்கப்படும். திருச்சியில் ரூ.350 கோடியில் டைடல் பூங்கா அமைக்கப்படும்.
தூத்துக்குடி - முக்கிய திட்டங்களும் அறிவிப்புகளும்:
தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடியில் 13,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் நியோ டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் - நிதி அமை
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் ரூ.2000 கோடி மதிப்பில் விண்வெளி பூங்கா அமைக்கப்படும்.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications