தமிழ்நாடு அரசு குடும்ப வருமானத்தை அடிப்படையாக கொண்டு குடும்ப தலைவிகளை தேர்வு செய்து மாதம் தோறும் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகையாக வழங்கி வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் லட்சக்கணக்கான பெண்கள் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகையாக பெற்று வருகிறது.
திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கிலேயே 1000 ரூபாய் பணம் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வரவு வைக்கப்பட்டு வருகிறது. தகுதி இருந்தும் தங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக பல பெண்கள் புகார் கூறினர். புதிதாக ரேஷன் அட்டை பெற்றவர்கள் தங்களுக்கு மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பம் செய்ய வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரினர்.

இத்தகைய சூழலில் தான் தமிழ்நாடு அரசு ஜூலை 15ஆம் தேதி முதல் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களை நடத்தியது. தகுதி வாய்ந்த பெண்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக மகளிர் உரிமைத் தொகை வேண்டி விண்ணப்பம் செய்யலாம் என அறிவித்தது. லட்சக்கணக்கான மகளிர் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக மகளிர் உரிமைத் தொகை கோரி விண்ணப்பம் செய்தனர். நவம்பர் 15ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் 10000 முகாம்கள் நடத்தப்பட்டன.
இந்நிலையில் புதிதாக விண்ணப்பம் செய்த மகளிருக்கு அவர்களின் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா நிராகரிக்கப்பட்டதா என தெரியாமல் குழப்பத்தில் இருந்தனர். நிறைய பேருக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் வண்ணம் அரசு விதிகளிலும் தளர்வுகளை கொண்டு வந்தது. இந்நிலையில் சட்டப்பேரவையில் உரையாற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விடுபட்ட மகளிருக்கு டிசம்பர் 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை கிடைக்கும் என அறிவிப்பு வெளியிட்டார். இதனால் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக விண்ணப்பம் செய்த லட்சக்கணக்கான மகளிர் மகிழ்ச்சி அடைந்தனர்.
இது ஒரு புறம் இருக்க அதிகாரிகள் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்களை கள ஆய்வு செய்தனர். வருவாய் துறை அதிகாரிகள் விண்ணப்பம் செய்த மகளிரின் வீடுகளுக்கே சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில் தான் யாருக்கு எல்லாம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்குவது என்ற பட்டியல் தயாராகி விட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் மீண்டும் ஒரு நற்செய்தியை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின் அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்பே மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். சிவகாசியில் மேயர் சங்கீதா இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 27 மாதங்களாக 1 கோடியே 15 லட்சம் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. இந்த மாதம் 12-ம் தேதி முதல் விடுபட்ட மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கப்படும் மேலும் பலர் இந்த மாதம் முதல் மகளிர் உரிமைத் தொகை பெற உள்ளனர் என அறிவித்துள்ளார்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications