மகா கும்பமேளாவின்போது படகோட்டிகளுக்கு உரிய ஊதியம் வழங்கப்படவில்லை என்று சமாஜ்வாதி கட்சியினர் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். ஆனால் இதை உத்தர பிரதேச முதல்வரான யோகி ஆதித்யநாத் முற்றிலுமாக மறுத்துள்ளார். உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத்தில் உரையாற்றிய யோகி ஆதித்யநாத், 130 படகுகளை வைத்திருந்த ஒரு படகோட்டியின் குடும்பம் மகா கும்பமேளாவின்போது, வெறும் 45 நாட்களில் மொத்தமாக ரூ.30 கோடி சம்பாதித்ததாக கூறியுள்ளார். அப்படி பார்த்தால் ஒவ்வொரு படகும் 45 நாட்களில் ரூ. 23 லட்சம் வரை வருமானம் பெற்றுத் தந்துள்ளது. அதாவது ஒரு நாளைக்கு சுமார் ரூ.50,000 முதல் ரூ.52,000 ஆகும்.
பிரயாக்ராஜில் நடைபெற்ற மகாகும்பா மேளாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராட வந்தனர். இதனால், படகு சவாரிக்கு அதிக தேவை ஏற்பட்டது. படகோட்டிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கணிசமான வருமானம் ஈட்டினர்.

படகோட்டிகளுக்கு இந்த கும்பமேளாவில் நல்ல வருமானம் கிடைத்தது குறித்து பேசிய முதல்வர், 2025 முதல் 2026-ஆம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டையும் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் முக்கியமாக விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், ஏழைகளின் நலன் போன்றவற்றை கருத்தில் கொண்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும், விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும் தேவையான திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டது. யோகி ஆதித்யநாத் தனது உரையில் 2017-ஆம் ஆண்டு முதல் உத்தர பிரதேச மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதை எடுத்துரைத்தார்.
அதே நேரம் எதிர்க்கட்சிகள் பொதுமக்களை ஏமாற்ற ஓட் பேங்க் பாலிடிக்ஸ்-ஐ பயன்படுத்துவது குறித்தும் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டினார். "எங்களுடைய அரசாங்கம் எப்போதும் மக்களின் நலனை குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்களின் நலனை முன்னுரிமைப்படுத்தி வருகிறது", என்று முதல்வர் கூறினார்.
2025 முதல் 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் சமூகத்தில் மிகவும் நலிவடைந்த பிரிவினருக்கானது என்று கூறிய முதல்வர், இதற்கு முன்னர் நடந்த பட்ஜெட்டில் எந்தெந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது என்றும் விளக்கினார். "எங்கள் முதல் பட்ஜெட்டான 2017 முதல் 2017-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இன்று விவசாயிகள் மனநிறைவுடன் உள்ளனர். தற்கொலைகள் பெருவாரியாக குறைந்துவிட்டன.
2018 முதல் 2019-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் உள்கட்டமைப்புக்கும் 2019-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும், 2020-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கவும் முக்கிய முடிவுகளை எடுத்தோம்.
2021 முதல் 2022 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் மாநிலம் தன் நிறைவு பெறுவதற்கு தேவையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதேபோல 2023 முதல் 2024-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் அனைத்து துறைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு முடிவுகள் எடுக்கப்பட்டது என்று ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்களின் முக்கிய அம்சம் குறித்தும் யோகி ஆதித்யநாத் கூறினார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications