உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி இருக்கிறது. பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி வரை மொத்தம் 45 நாட்கள் நடக்கும் இந்த மகா கும்பமேளாவில் 45 கோடிக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டு கங்கை நதியில் புனித நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்களும், துறவிகளும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்வதற்காக உத்தர பிரதேச மாநிலத்தை நோக்கி படையெடுத்தவுடன் இருக்கிறார்கள்.

இந்த மகாகும்பமேளா நிகழ்வுக்காக உத்தர பிரதேச அரசு 6382 கோடி ரூபாய் பட்ஜெட் நிர்ணயம் செய்துள்ளது. அதே வேளையில் மகா கும்பமேளா நிகழ்ச்சியின் மூலம் உத்தர பிரதேச மாநில அரசுக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
முன்னதாக உத்திர பிரதேச மாநில அரசு மகா கும்பமேளா நடைபெறக்கூடிய ஒன்றரை மாத காலங்களில் தங்களுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் வரை வருமானம் பொருளாதார நடவடிக்கைகள் நடைபெறும் என தெரிவித்திருந்தது. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தின் ஆலோசகரும் முன்னால் ஐஏஎஸ் அதிகாரியுமான பவானிஷ் அவஸ்தி இந்த தகவலை வெளியிட்டு இருந்தார்.
ஒரு பக்தர் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் எட்டாயிரம் ரூபாய் செலவு செய்கிறார் என வைத்துக் கொண்டால் இங்கு வரக்கூடிய பக்தர்களின் எண்ணிக்கை கணிப்பை கொண்டு நாம் கணக்கிடும் போது இது 3.2 லட்சம் கோடி ரூபாய் வரை செல்லக்கூடும் என கூறியுள்ளார்.
மகா கும்பமேளா நிகழ்வுக்கான தலைமை அதிகாரியாக செயல்படக்கூடிய விஜய் ஆனந்த் உத்தர பிரதேச மாநில அரசு இந்த மகா கும்பமேளா நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் வரி, வாடகை உள்ளிட்டவை மூலம் மட்டும் 25 ஆயிரம் கோடி வருமானமாக ஈட்டும் எனக் கூறியுள்ளார். மகா கும்பமேளா நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெறக்கூடிய பரிவர்த்தனைகளின் மதிப்பு 2 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 3 லட்சம் கோடி ரூபாய் வரை இருக்கும் என கூறப்படுகிறது.
சிறிய வியாபாரிகள், டெம்போ ஆப்ரேட்டர்கள், ரிக்சா ஓட்டுபவர்கள், பூ விற்பனை செய்பவர்கள் மகா கும்பமேளா நினைவு சின்னங்களை விற்பனை செய்பவர்கள் ஹோட்டல்களை நடத்துபவர்கள் உணவகங்களை நடத்துபவர்கள் இந்த நிகழ்வின் மூலம் பெரிய அளவில் வருமானம் பார்ப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
என்டிடிவி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி அடிப்படையில் இந்த நிகழ்வின் மூலம் மட்டும் இந்திய ஜிடிபிக்கு ஒரு சதவீத வருமானம் கிடைக்கும் என கூறியுள்ளார். அனைத்து இந்திய வணிகர்களுக்கான கூட்டமைப்பு மகா கும்பமேளா நிகழ்ச்சி மூலம் இரண்டு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் நடைபெறும் என கூறியுள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications