கும்பமேளா: முதலீடு போட்டது என்னவோ ரூ.7500 கோடிதான்.. திரும்ப வந்தது ரூ.3 லட்சம் கோடி.!!

உத்திரபிரதேச மாநிலம் பிரக்யராஜில் 45 நாட்கள் நடைபெற்ற மஹாகும்பமேளா 2025- க்கு பக்தர்கள் வருகை சாதனை படைக்கும் வருகை மற்றும் பொருளாதார தாக்கத்தைக் கண்டது. எண்ணற்ற பிரபலங்கள், சிறப்பான வணிகங்கள், வைரல் தகவல்கள் என விறுவிறுப்பிற்கு பஞ்சமில்லாமல் பல உலகளாவிய மைல்கற்களைக் குறிக்கும் வகையில் நிறைவடைந்துள்ளது. உத்தரபிரதேச அரசு இந்த நிகழ்வின் மத மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை வலியுறுத்தியது மட்டுமல்லாமல், அதன் பொருளாதார தாக்கத்தையும் எடுத்துக்காட்டியுள்ளது.

அதன்படி, இந்த நிகழ்வில் உருவாக்கப்பட்ட வணிகத்தின் அளவையும் வருவாயையும் காட்சிப்படுத்தும் முக்கிய நிதி நுண்ணறிவுகளை மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பகிர்ந்து கொண்டுள்ளார்.

கும்பமேளா: முதலீடு போட்டது என்னவோ ரூ.7500 கோடிதான்.. திரும்ப வந்தது ரூ.3 லட்சம் கோடி.!!

இதுகுறித்து, கடந்த புதன்கிழமை உத்தரபிரதேச சட்டமன்றத்தில் உரையாற்றியபோது, முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு வியக்கத்தக்க வெற்றிக் கதையை வெளிப்படுத்தினார். அதில், இந்தக் குடும்பம் 130 படகுகளை வைத்திருந்தது, மேலும் 45 நாள் நிகழ்வில், அவர்கள் கூட்டாக ரூ.30 கோடி நிகர லாபத்தை ஈட்டினர். இதன் பொருள் ஒரு படகிலிருந்து ரூ.23 லட்சம் வருமானம், ஒவ்வொரு படகும் தினமும் ரூ.50,000 க்கு மேல் வருவாய் ஈட்டியது குறித்து தெரிவித்தார். அப்போது ஒட்டுமொத்த வரவு, செலவு கணக்கை வெளியிட்டார்.

அதேபோல், மகா கும்பமேளாவில் ரூ.3 லட்சம் கோடி வணிக வருவாயை ஈட்டியதாக உத்தரப் பிரதேச அரசும் தெரிவித்துள்ளது. கூடுதலாக, இந்த நிகழ்வின் மூலம் ரூ.55,000 கோடி வருவாய் ஈட்டும் என்று மாநிலம் எதிர்பார்க்கப்பட்டது. இந்த விழா மில்லியன் கணக்கானவர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்கியது.

கும்பமேளாவிற்காக அரசு ரூ.7500 கோடி முதலீடு செய்த நிலையில், அதில் ரூ.3 லட்சம் கோடியை திரும்ப எடுத்துள்ளது. அதே நேரத்தில் மத்திய அரசு ரூ.15,000 கோடியை பிரயாக்ராஜில் முதலீடு செய்தது. இந்த விரிவான நிதி உள்கட்டமைப்பு, தளவாடங்கள் மற்றும் வசதிகளை உள்ளடக்கியது, இது மகா கும்பமேளாவின் தடையற்ற அமைப்புக்கு பங்களித்தது.

அந்த வகையில், யோகி ஆதித்யநாத் வரவுகளை வெளியிட்டார். அதனை பொறுத்தவரையில், துறை வாரியாக, ஹோட்டல் துறையில் ரூ.40,000 கோடி வரவும், உணவுத் துறையில் ரூ.33,000 கோடியும் வரவு வந்துள்ளது. போக்குவரத்து துறைக்கு ரூ.1,50,000 கோடியும், பிரசாதம் துறைக்கு ரூ.20,000 கோடியும் வந்துள்ளது.

அதேபோல், சுங்க வசூல் துறையில் ரூ.300 கோடியும், நன்கொடை துறைக்கு ரூ.600 கோடியும் மற்றும் இதர துறைக்கு ரூ.66,000 கோடியும் வசூல் கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சுமார் 66 கோடி பக்தர்கள் மகா கும்பமேளா 2025 இல் கலந்து கொண்டதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன, இது வரலாற்றில் மிகப்பெரிய மதக் கூட்டங்களில் ஒன்றாகும். பொருளாதார நடவடிக்கைகளின் அளவு மிகப் பெரியதாக இருந்ததால், 16 வங்கிகள் வளாகத்திற்குள் கிளைகளை அமைத்து, ரூ.37 கோடி மதிப்புள்ள பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தின.

மகாகும்பமேளாவில் ஒரே இரவில் மோனாலிசா போஸ்லே, இந்துராவைச் சேர்ந்த ஒரு 16 வயது சிறுமி வைரலானார். சமூக வலைதளங்களிலும் கலக்கி வருகிறார். அந்த சிறுமியின் அழகு அவளை ஒரே இரவில் உலகம் பேச வைத்தது. அவரது வீடியோக்கள் வைரலானது. ருத்ராட்ச மாலைகளை விற்பனை செய்து வந்த அப்பெண் இப்போது பிரபலமாகியுள்ளார்.

அதேபோல், காதலி கொடுத்த யோசனையின் மீது நம்பிக்கை வைத்த இளைஞர் ஒருவர் மகா கும்ப மேளாவில் ஒரே வாரத்தில் ரூ.40,000 சம்பாதித்து நெட்டிசன்களிடையே வரவேற்பையும் பாராட்டையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+