அஜித் பவாரின் இறுதி சடங்கு இன்று.. ஸ்தம்பித்த மகாராஷ்டிரா..!!

மகாராஷ்டிரா துணை முதலமைச்சரும் என்சிபி தலைவருமான அஜித் பவாரின் இறுதி சடங்குகள் வியாழக்கிழமை (ஜனவரி 29) அவரது அரசியல் கோட்டையான பாராமதியில் முழு அரசு மரியாதையுடன் நடைபெற உள்ளன. விமான விபத்தில் உயிரிழந்த அவரது உடல் வித்யா பிரதிஷ்டான் மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.

அஜித் பவாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள், கட்சி தொண்டர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் நாள் முழுவதும் இங்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித் பவாரின் இறுதி சடங்கு இன்று.. ஸ்தம்பித்த மகாராஷ்டிரா..!!

மேலும் முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ், துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் அஜித் பவாரின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள உள்ளனர்.

மகாராஷ்டிரா அரசு புதன்கிழமை (ஜனவரி 28) அன்று பொது விடுமுறை அறிவித்தது. ஜனவரி 28 முதல் 30 வரை மூன்று நாட்கள் அரசு துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் மாநிலம் முழுவதும் உள்ள அரசு கட்டிடங்களில் தேசிய கொடி பறை அடைக்கப்பட்டு பறக்கவிடப்படும்.

மேலும் மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் ஜனவரி 30 வரை மூடப்பட்டுள்ளன. மும்பை பல்கலைக்கழகம், பள்ளிகள், பிற கல்லூரிகள் உள்ளிட்டவை ஜனவரி 28 அன்று திட்டமிடப்பட்ட தேர்வுகளை ஒத்திவைத்துள்ளன.

மாநில அரசு அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், மும்பை மாநகராட்சி அலுவலகங்கள் புதன்கிழமை மூடப்பட்டன. தனியார் கடைகள், சந்தைகள் சில இடங்களில் தானாக முன்வந்து மூடப்பட்டன. புனே மற்றும் பாராமதியில் வர்த்தக சந்தைகள், வர்த்தக பகுதிகள் நேற்றும். இன்றும் முழுமையாக மூடப்பட்டன.

மேலும் அரசு நிதியுதவி கொண்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், கலாச்சார விழாக்கள், அரசியல் நிகழ்ச்சிகள், முக்கிய கொண்டாட்டங்கள், போராட்டங்கள் ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன. அரசியல் கட்சிகள் பிரச்சாரங்கள், கூட்டங்கள், ரேலிகளை தன்னார்வலர்களாக நிறுத்தியுள்ளன.

ஆனால் மாநிலம் முழுவதும் அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து இயங்குகின்றன. மருத்துவமனைகள், மருந்தகங்கள், பொது போக்குவரத்து (உள்ளூர் ரயில்கள், பேருந்துகள்), அவசர சேவைகள், வங்கிகள், ஏடிஎம்கள் ஆகியவை இயங்கிக் கொண்டிருக்கின்றன.

பொதுவாக வங்கிகள் ஆர்பிஐ காலாண்டர் அடிப்படையில் இயக்கும் காரணத்தால் மூடப்படவில்லை, மேலும் பங்குச்சந்தையும் வழக்கம் போல் இயங்கி வருகிறது.

இந்த மூன்று நாட்கள் அரசு துக்கம் அஜித் பவாரின் பங்களிப்பை நினைவுகூரும் வகையில் அனுசரிக்கப்படுகிறது. மகாராஷ்டிரா மக்கள் மத்தியில் ஆழ்ந்த துக்கம் நிலவுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+