இந்தியாவின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த மகாராஷ்டிரா அரசு முக்கியமான நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.
100 நாள் திட்டமாக, முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் புதிய வாகனங்களை வாங்குவோர், சொந்தமாக பார்க்கிங் இடம் வைத்துள்ளவர்களுக்கு மட்டுமே புதிய கார் வாங்க அனுமதி அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.

யார் வாங்கினாலும் அரசு அதிகாரிகள் வந்து வீட்டில் பார்க்கிங் இடம் உள்ளது என்பதை உறுதி செய்து சான்றிதழ் வழங்கும், இந்த சான்றிதழ் இருந்தால் மட்டுமே புதிய கார் வாங்க முடியும். அதாவது புதிய கார் வாங்கும் போது இந்த சான்றிதழ் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். இது இல்லையென்றால் கார் வாங்க முடியாது என்ற புதிய சோதனை திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த முயற்சி, மும்பை, நாக்பூர், புனே நகர்ப்புறங்களில் போக்குவரத்து நெரிசல் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் மோசமடைந்ததிற்கு மத்தியில் எடுக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய விதிமுறைகளின்படி, கார் வாங்க திட்டமிடுவோர் BMC வழங்கும் "சர்டிபைடு பார்க்கிங் ஏரியா" (CPA) சான்றிதழைப் பெற்று, மாநில போக்குவரத்துத் துறையால் சரிபார்க்க வேண்டும்.
இந்த சான்றிதழ், வாகன வாங்குவோருக்கு பப்ளிக் அல்லது பிரைவேட் பார்க்கிங் வசதிகளில் தனியாக ஒதுக்கப்பட்ட பார்க்கிங் இடம் இருப்பதற்கான ஆதாரமாக செயல்படும். டிசம்பர் 30 அன்று போக்குவரத்து ஆணையர் விவேக் பீமன்வார் முதல்வரிடம் முன்வைத்த அறிக்கையில் இந்த பரிந்துரை இருந்தது.
இந்த விதிமுறைகளை அமல்படுத்தும் முன், கிடைக்கக்கூடிய பப்ளிக் அல்லது பிரைவேட் பார்க்கிங் இடங்களின் விரிவான மதிப்பீட்டை அரசு மேற்கொள்ளும். இந்த செயல்முறையில் கூட்டுறவு வீட்டு வசதிகள், வீட்டுவசதி அமைச்சகங்கள், பொதுப்பணித் துறை (PWD), நகர்ப்புற மேம்பாட்டு அதிகாரிகள், சிவில் அமைப்புகள், போக்குவரத்து நிபுணர்கள், மும்பை பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையம் (MMRDA) மற்றும் கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து செயல்படுவார்கள்.
லண்டன், டோக்கியோ, நியூயார்க், சூரிச் மற்றும் சிங்கப்பூர் போன்ற உலகின் பிற முக்கிய நகரங்களில் இதே திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு உல்ளது. இந்த மாடலை அடிப்படையாகவே இந்த பார்க்கிங் கட்டுப்பாடுகளை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications