இந்திய ரூபாய் நோட்டுகளில் அச்சிட நிராகரிக்கப்பட்ட காந்தியின் புகைப்படம்! எப்படி வந்தது தெரியுமா?

ஒரு நாட்டின் நாணயம் மற்றும் பணத்தில் அந்த நாட்டின் வரலாறு, கலாச்சாரம், பாரம்பரியத்தை எடுத்துச் சொல்லும் சின்னங்கள் மற்றும் உருவங்கள் இருக்கும். உலகெங்கிலும் பல நாடுகளில் தங்கள் நாட்டின் தலைவர்களை கௌரவிக்கும் வகையில் பணத்தில் அவர்களுடைய புகைப்படம் அச்சிடப்பட்டிருக்கும். அமெரிக்காவில் ஜார்ஜ் வாஷிங்டன், பாகிஸ்தானில் முகமது அலி ஜின்னா மற்றும் சீனாவில் மாவோ சேதுக் இந்தியாவில் மகாத்மா காந்தி என அந்நாட்டின் சிறந்த தலைவர்களின் படங்கள் அச்சிடப்பட்டிருக்கும்.

இந்தியாவில் சுதந்திரம் கிடைத்த பிறகு நாணயத்திலும் பணத்தாள்களிலும் காந்தியின் புகைப்படத்தை பயன்படுத்துவதற்கு முன்பு காந்தியின் படம் நிராகரிக்கப்பட்டது. அதற்கு பிறகு தான் காந்தி நமது கரன்சி நோட்டுகளை அலங்கரிக்கத் தொடங்கியுள்ளார்.

 இந்திய ரூபாய் நோட்டுகளில் அச்சிட நிராகரிக்கப்பட்ட காந்தியின் புகைப்படம்! எப்படி வந்தது தெரியுமா?

காந்தியின் புகைப்படத்தை ரூபாய் நோட்டுகளில் பயன்படுத்த நிராகரிக்கப்பட்டது ஏன்?: சுதந்திரத்திற்குப் பிறகு கரன்சி நோட்டுகளில் அந்தந்த தேசத்தின் தந்தை இடம்பெறுவார் என்பது இயல்பானதாக தோன்றினாலும், மகாத்மா காந்தி நோட்டுகளில் அச்சிடப்பட முதல் தேர்வாக இருக்கவில்லை.

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) இணையதளத்தின் படி, "1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதி நள்ளிரவில் இந்தியா ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றது. 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி அன்று இந்தியக் குடியரசு நிறுவப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் ரிசர்வ் வங்கி ஏற்கனவே இருந்த ரூபாய் நோட்டுகளை தொடர்ந்து வெளியிட்டது.

1949-ஆம் ஆண்டு இந்திய அரசு ஒரு ரூபாய் நோட்டை புதிய வடிவமைப்பில் வெளியிட்டது. சுதந்திர இந்தியாவின் சின்னங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. முதலில் மகாத்மா காந்தியின் உருவத்தை வைக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் இறுதியாக சாரநாத் லயன் கேபிடலை காந்தியின் உருவத்திற்கு பதிலாக தேர்வு செய்யப்பட்டது.

1950-கள் மற்றும் 1960-களில் புலிகள் மற்றும் மான்கள் போன்ற கம்பீரமான விலங்குகளின் படங்கள், ஹிராகுட் அணை மற்றும் ஆர்யபட்டா செயற்கைக்கோள் போன்ற தொழில்துறை முன்னேற்றத்தின் சின்னங்கள் மற்றும் பிரகதீஸ்வரர் கோவில் போன்றவை இடம்பெற்றன. இந்த வடிவமைப்புகள் இந்தியாவின் வளர்ச்சி மற்றும் நவீனமயமாக்கல் மற்றும் அதன் கலாச்சார பாரம்பரியத்தில் புதிய கவனம் செலுத்துவதைப் பிரதிபலித்தது.

1969-ஆம் ஆண்டு காந்தியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் வகையில் முதன்முறையாக ரூபாய் நோட்டில் காந்தியின் உருவம் இடம்பெற்றது. அந்தக் காசோலையில் காந்திஜி அமர்ந்திருக்கும் நிலையில், பின்னணியில் அவரது சேவாகிராம் ஆசிரமம் இருப்பது போல் வடிவமைக்கப்பட்டது. 1987-ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி அரசு 500 ரூபாய் நோட்டை மீண்டும் அறிமுகப்படுத்தியபோது, அதில் காந்தியின் உருவம் இடம்பெற்றது.

சமீப காலமாக, கரன்சி நோட்டுகளில் காந்தியின் படத்தை மாற்றுமாறு பல்வேறு குழுக்களிடமிருந்து அவ்வப்போது அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளன. ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ், சர்தார் படேல் போன்ற உருவங்கள் மற்றும் லட்சுமி மற்றும் விநாயகர் போன்ற தெய்வங்கள் கூட மாற்றாக முன்மொழியப்பட்டுள்ளன.

2022-ஆம் ஆண்டில், ஆம் ஆத்மி கட்சி தேசத்திற்கு செழிப்பைக் கொண்டுவர இந்திய நோட்டுகளில் லட்சுமி தேவி மற்றும் விநாயகப் பெருமானின் படங்களை இடம்பெறச் செய்ய பரிந்துரைத்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த முன்மொழிவு சூடான விவாதத்தைத் தூண்டியது, எதிர்க்கட்சித் தலைவர்களும் ஆளும் பாரதிய ஜனதா கட்சியும் இந்த ஆலோசனையை விமர்சித்தன.

2 ஆண்டுகளுக்கு முன்பு, மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தி டிஜிட்டல் ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தியின் படத்தைச் சேர்க்காததற்கு" தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். டிஜிட்டல் கரன்சி வடிவமைப்பில் மகாத்மா காந்தியை புறக்கணித்ததற்காக ரிசர்வ் வங்கி மற்றும் அரசுக்கு எதிராக அவர் ட்வீட் செய்திருந்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+