சென்னை: இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளரான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் சந்தை மதிப்பில் டாடா மோட்டார்ஸ் உடன் போட்டிப்போட்டு வரும் வேளையில், மஹிந்திரா தனது பிரபலமான SUV மாடல்களான போலிரோ மற்றும் ஸ்கார்பியோ ஆகியவற்றின் எலக்ட்ரிக் எடிசன்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
புதிய எலக்ட்ரிக் SUV களுக்கு ஸ்கார்பியோ.e மற்றும் போலிரோ.e என்று பெயரிடப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் ஏழு புதிய எலக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்துவது மஹிந்திரா நிறுவனத்தின் முக்கிய திட்டமாக உள்ளது.

இந்த அறிவிப்பை மஹிந்திரா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், ஆட்டோ மற்றும் பண்ணை துறை தலைமை செயல் அதிகாரியுமான ராஜேஷ் ஜெஜூரிக்கார் முதலீட்டாளர் கூட்டத்தில் பேசும்போது தெரிவித்தார்.
ராஜேஷ் ஜெஜூரிக்கார் பேசுகையில் "அனைத்து ICE இன்ஜின் கொண்ட வாகனங்களும் காலப்போக்கில் எலக்ட்ரிக்மயமாக்கப்படும்" கூறினார். மஹிந்திராவின புதிய எலக்ட்ரிக் மாடல்கள் பிரிவில் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட XUV.e மற்றும் Thar.e போன்ற எலக்ட்ரிக் வாகனங்களைப் போல, அனைத்து பெட்ரோல் மாடல்களின் பெயருக்கு பின்னால் '.e' என்பதை இணைத்து எலக்ட்ரிக் கார்களுக்கு பெயரிடப்படும்.
மஹிந்திரா நிறுவனத்தின் பிற எலக்ட்ரிக் வாகனங்களைப் போலவே, ஸ்கார்பியோ.e மற்றும் போலிரோ.e ஆகியவையும் தங்கள் பேட்டரி மற்றும் மோட்டார்களை பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது.
Thar.e கான்செப்ட் மாடலில் 109hp பவர் மற்றும் 135Nm டார்க் திறன் கொண்ட முன் மோட்டார் மற்றும் 286hp பவர் மற்றும் 535Nm டார்க் திறன் கொண்ட பின் மோட்டார் ஆகியவை இணைக்கப்பட்டு இருந்தது. இதன் மூலம் இந்த மாடலுக்கு ஆல்-வீல்-டிரைவ் திறன் கிடைத்ததுள்ளது.
மஹிந்திரா நிறுவனம் இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களில் 60kWh அல்லது 80kWh பேட்டரி பேக்குகளை பொருத்த முடியும் என்று தெரிவித்துள்ளது. 60kWh பேட்டரி பேக் சுமார் 325 கிமீ ரேஞ்ச் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே சமயம் 80kWh பேட்டரி பேக் 435-450 கிமீ வரை ரேஞ்ச் வழங்கும் திறன் கொண்டது.
எவ்வாறெனினும், ஸ்கார்பியோ.e மற்றும் போலிரோ.e ஆகிய எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரி விவரங்கள் இதுவரை நிறுவனத்தால் வெளியிடப்படவில்லை.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications