இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அனைத்தும் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் இறங்கியுள்ள நிலையில் இரு நிறுவனங்கள் மட்டுமே EV உற்பத்தியில் இறங்காமல் உள்ளது.
ஒன்று மாருதி சுசூகி மற்றொன்று இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கென அடித்தளமிட்ட முதல் நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா இத்துறையில் பெரிய அளவில் வளராமலேயே உள்ளது.
இதேவேளையில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா கடந்த 3 வருடத்தில் அறிமுகம் செய்த அனைத்து பெட்ரோல், டீசல் கார்களும் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் வெளிநாட்டுக் கார்களில் இருக்கும் அனைத்து வசதிகளும் (டெக் வசதிகள்) மஹிந்திரா தனது கார்களில் கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில் தற்போது தனது கவனத்தை எலக்ட்ரிக் வாகனங்கள் மீது முழுமையாகத் திருப்பியுள்ளது, இதற்கான முதல் படியை படு பயங்கரமாக வைத்துள்ளது.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் எலக்ட்ரிக் வாகனத்திற்குத் தனிப்பட்ட கவனத்தைச் செலுத்த வேண்டும் என்று முடிவு செய்துள்ள நிலையில் இத்துறைக்காகப் பிரத்தியேகமாகத் தனி நிறுவனத்தைத் துவங்க முடிவு செய்துள்ளது.
எலக்ட்ரிக் வாகன நிறுவனம்
இந்தப் புதிய எலக்ட்ரிக் வாகன நிறுவனத்தைத் துவங்கவும், அதன் மூலம் உற்பத்தி, வர்த்தகம் ஆகியவற்றைச் செய்ய முதலீட்டை ஈர்க்க முடிவு செய்து தற்போது பிரிட்டிஷ் இண்டர்நேஷ்னல் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் சுமார் 1,925 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
70,070 கோடி ரூபாய் மதிப்பீடு
இப்புதிய முதலீட்டின் மூலம் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் மதிப்பு 9.1 பில்லியன் டாலர் அதாவது 70,070 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த முதலீட்டை உறுதி செய்யும் வகையில் இரு தரப்பும் ஒப்பந்தம் செய்துள்ளது.
டாடா மோட்டார்ஸ்
எலக்ட்ரிக் வாகன சந்தையில் டாடா மோட்டார்ஸ் தற்போது முன்னோடியாக இருக்கும் நிலையில், மஹிந்திரா-வின் வருகை பெரும் போட்டியை உருவாக்கும். இதேபோல் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா இந்த 1925 கோடி ரூபாய் முதலீட்டை டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் 70000 கோடி ரூபாய் மதிப்பீட்டிலேயே திரட்டியுள்ளது முக்கியமானதாக விளங்குகிறது.
8000 கோடி ரூபாய் முதலீடு
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தனது புதிய எலக்ட்ரிக் வாகன பிரிவில் சுமார் 8000 கோடி ரூபாய் வரையில் முதலீடு செய்யத் திட்டமிட்டு உள்ளது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications