இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் ஸ்கோடா ஆட்டோ வோக்ஸ்வாகன் இந்தியா (SAVWIPL) ஆகியவை இணைந்து இந்தியாவில் ஒரு கூட்டணி நிறுவனத்தை உருவாக்கவும், அதன் மூலம் தொழில்நுட்பத்தை பகிர்வது மட்டும் அல்லாமல் இரு நிறுவனங்களின் உற்பத்தியை அதிகரிக்கும் முக்கியமான இலக்கை அடைய கூட்டணி நிறுவனத்தை அமைக்க முடிவு செய்துள்ளது.
இதற்காக இரு நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் அடுத்த சில நாட்களில் மும்பையில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகைய கூட்டணி குறித்து ஆனந்த் மஹிந்திரா மறுப்பு தெரிவித்தாலும், இக்கூட்டம் நடை பெறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது இந்திய ஆட்டோமொபைல் துறையில் முக்கி திருப்பமாக இருக்கும்.

இந்த சந்திப்பை தொடர்ந்து கூட்டணி வெற்றிகரமாக முடிந்தால் இரு தரப்பும் தங்கள் வாகன தயாரிப்பு, வாகன பிளாட்பார்ம் மற்றும் தொழிற்சாலைகள் பெரிய அளவில் பயன்படுத்தி இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டு உள்ளது.
வோக்ஸ்வாகன் மற்றும் ஸ்கோடா தற்போது இந்திய சந்தையில் விற்கும் செடான்கள் மற்றும் எஸ்யூவி கார்கள் மற்றும் வோக்ஸ்வாகன் குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆடி, போர்ஷே மற்றும் லம்போர்கினி ஆகிய ஆடம்பர பிராண்டுகள் ஆகியவை இப்புதிய கூட்டணி பேச்சுவார்த்தையில் இருக்காது என்பதும் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
சில மாதங்களுக்கு முன்பே ஸ்கோடா தலைவர் இந்திய வர்த்தகத்தை மேம்படுத்த கூட்டணியை தேடி வருவதாக அறிவித்தது. இதை தொடர்ந்து தான் தற்போது மஹிந்திரா உடன் புதிய கூட்டணிக்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஸ்கோடா ஆட்டோவின் நிர்வாக தலைவரான கிளாஸ் செல்மர் மும்பையில் இருக்கும் வேளையில் இக்கூட்டணி பேச்சுவார்த்தையை இவர் தலைமையில் நடக்க உள்ளது.
இந்த கூட்டணி மூலம் இந்தியாவில் மஹிந்திரா நிறுவனத்தின் உற்பத்தி பலம் மற்றும் சப்ளை செயின் பலத்துடன் ஸ்கோடா மற்றும் வோக்ஸ்வாகன் அடுத்தடுத்து தனது புதிய மாடல் கார்களை அறிமுகம் செய்ய முடியும். இதற்கு பிரதிபலனாக மஹிந்திராவுக்கு ஸ்கோடா மற்றும் வோக்ஸ்வாகன் பிராண்டின் தொழில்நுட்பம், காரின் பிளாட்பார்ம் ஆகியவற்றை பயன்படுத்த முடியும்.
இது அனைத்தும் ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டவை, எனவே இந்த விதிமுறைகள் மாறுப்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதேபோல் இக்கூட்டணிக்காக யார் எவ்வளவு முதலீடு செய்யப்போகிறார்கள் என்பதும் தற்போது நடக்கும் பேச்சுவார்த்தையில் தான் முடிவு செய்யப்படும். மாருதி சுசூகி - டோயோட்டா மத்தியில் தற்போது செயல்பாட்டில் இருக்கும் ஒப்பந்தத்திற்கு நிகராக இந்த ஒப்பந்தம் இருக்கும்.
இந்த பேச்சுவார்த்தைகள் முடிந்து, அக்டோபர் மாதம் இறுதியில் அல்லது நவம்பர் மாத தொடக்கத்தில் கூட்டணி நிறுவனத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட வாய்ப்புள்ளது தெரிகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications