தமிழ்நாட்டை சேர்ந்த லட்சக்கணக்கான பெண்கள் புதிதாக மகளிர் உரிமைத்தொகை கோரி விண்ணப்பம் செய்திருக்கின்றனர் . தங்களின் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகை கிடைக்குமா என்று எதிர்பார்ப்பு லட்சக்கணக்கான பெண்கள் மத்தியில் நிலவுகிறது.
தமிழ்நாடு அரசு தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளை தேர்ந்தெடுத்து மாதந்தோறும் ஆயிரம் ரூபாயை மகளிர் உரிமை தொகையாக அவர்களின் வங்கி கணக்கிலேயே வரவைத்து வருகிறது . பெண்களை பொறுத்தவரை இந்த மகளிர் உரிமை தொகையை அவர்கள் தங்களுடைய சொந்த விஷயங்களுக்காகவும் ,குடும்ப செலவுகளுக்காகவும், மருத்துவ செலவுகளுக்காகவும் பயன்படுத்துகின்றனர் . பெரும்பாலான பெண்கள் இந்த ஆயிரம் ரூபாய் உரிமை தொகையை தங்கள் குழந்தைகளின் மற்றும் தங்கள் வீட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முதலீடும் செய்கின்றனர்.

சாமானிய குடும்பங்களை சேர்ந்த பெண்களை பொறுத்தவரை மாதம் தோறும் 1000 ரூபாய் உரிமை தொகை என்பது அவர்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய ஒரு வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் தான் தமிழ்நாடு அரசு புதிதாக மகளிர் உரிமைத்தொகை வேண்டி விண்ணப்பம் செய்பவர்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பை வெளியிட்டது .
கடந்த ஜூலை மாதம் 14ஆம் தேதியிலிருந்து நடைபெறக்கூடிய உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக லட்சக்கணக்கான பெண்கள் புதிதாக மகளிர் உரிமைத்தொகை வேண்டி விண்ணப்பம் செய்திருக்கின்றனர்.அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக அரசின் மிக முக்கியமான ஒரு திட்டமாக இந்த மகளிர் உரிமை தொகை திட்டம் பார்க்கப்படுகிறது. குறிப்பாக பெண்களின் வாக்குகளை கவர்வதற்கான ஒரு விஷயமாகவும் இது சொல்லப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் தமிழ்நாடு அரசு உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வாயிலாக பெறப்பட்ட மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணிகளை முடுக்கி இருக்கிறது.
அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வீடு வீடாக சென்று அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு டிசம்பர் மாதத்தில் இருந்து மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். எனவே மகளிர் உரிமை தொகையை வேண்டி விண்ணப்பம் செய்த பெண்கள் அனைவரும் இதனால் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.
இந்த சூழலில் வருமான வரி செலுத்தும் குடும்பத்தினரை தவிர்த்து மற்ற குடும்பங்களை சேர்ந்த பெண்கள் அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்க தமிழக நிதித்துறை ஒப்புதல் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது . எனவே நீங்கள் மகளிர் உரிமைத்தொகை கோரி விண்ணப்பம் செய்திருக்கிறீர்கள் , உங்களுடைய குடும்பத்தில் வருமான வரி செலுத்தக்கூடிய நபர் இல்லை எனும் பட்சத்தில் நிச்சயமாக வரும் டிசம்பர் மாதத்தில் இருந்து உங்களுடைய வங்கி கணக்கில் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகை கிடைப்பது உறுதி.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications