இந்தியாவின் பொருளாதாரத்தைச் சீனா-வை போலவே ஏற்றுமதி மற்றும் உற்பத்தித் துறையைச் சார்ந்து மாற்ற வேண்டும் என மத்திய அரசு தீவிரமாக இருக்கும் நிலையில், இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்க மேக் இன் இந்தியா, PLI எனப் பல திட்டங்களையும், சலுகைகளையும் மத்திய மாநில அரசு அறிவித்து வருகிறது.
இதில் மேக் இந்தியா திட்டம் மூலம் இந்தியாவின் மொபைல் உற்பத்தியில் புதிய சாதனை படைக்கப்பட்டு உள்ளது.
மொபைல் போன் ஏற்றுமதி
செப்டம்பர் மாதம் முதல் முறையாக இந்தியாவின் மொபைல் போன் ஏற்றுமதியின் மதிப்பு முதல் முறையாக 1 பில்லியன் டாலர் அதாவது 8200 கோடி ரூபாய் அளவீட்டை எட்டி புதிய சாதனையைப் படைத்துள்ளது மட்டும் அல்லாமல் புதிய பென்ச்மார்க் அளவும் உருவாக்கப்பட்டு உள்ளது.
உற்பத்தி - ஏற்றுமதி
இந்தியாவில் தற்போது பல நிறுவனங்கள் தங்களது ஸ்மார்ட்போன்களைத் தயாரித்து வெளிநாட்டு உற்பத்தி சந்தைக்குக் கொண்டு சென்று வருகிறது. இதன் அடிப்படையில் சமீபத்தில் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்கள் சமீபத்தில் அறிமுகம் செய்த அனைத்து ஸ்மார்ட்போன்களையும் இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்துள்ளது.
1 பில்லியன் டாலர்
இதனால் இனி வரும் ஒவ்வொரு மாதமும் 1 பில்லியன் டாலர் அளவீட்டை தாண்டுகிறதா என்பது தான் ஸ்மார்ட்போன் தயாரிப்பு துறையின் முக்கிய இலக்காக இருக்கப் போகிறது. ஏப்ரல் - செப்டம்பர் காலாண்டில் இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி அளவு 4.2 பில்லியன் டாலராக உள்ளது. கடந்த ஆண்டு இதேகாலகட்டத்தில் வெறும் 1.7 பில்லியன் டாலராக இருந்தது.
ஸ்மார்ட்போன் ஏற்றுமதி
இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி அதிகரிக்க மிக முக்கியமான காரணம் ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி கான்டிராக்ட் நிறுவனங்களான பாக்ஸ்கான், விஸ்திரான், பெகாட்ரான் ஆகியவையும், சாம்சங் நிறுவனம் தான். இந்த நிறுவனங்கள் 40,995 கோடி ரூபாய் PLI திட்டத்தில் பலன் அடைந்துள்ளது.
பியூஷ் கோயல்
அரசின் Production Linked Incentive திட்டம் மூலம் நாட்டின் உற்பத்தி, வேலைவாய்ப்புகளை அதிகரித்து இந்தியாவைச் சர்வதேச உற்பத்தி ஹாப் ஆக மாற்றும் முயற்சிக்கு செப்டம்பர் மாத 1 பில்லியன் டாலர் மதிப்பிலான மொபைல் போன் ஏற்றுமதி பெரும் வெற்றி என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?



Click it and Unblock the Notifications