மாலத்தீவு: இந்தியாவின் தேசிய கட்டண கழகமான என்பிசிஐ (NPCI) வங்கி அட்டைகளின் கட்டண வலையமைப்பாக ரூபே( Rupay) சேவைகளை அறிமுகம் செய்தது. இதற்கு முன்பு விசா போன்ற வெளிநாட்டு சேவைகளையே நாம் பயன்படுத்தி வந்தோம். ஆனால் தற்போது நாடு முழுவதும் பரவலாக ரூபே கார்டுகள் பயன்பாட்டில் உள்ளன. இனி மாலத்தீவு நாட்டிலும் ரூபே கார்டுகள் செல்லுபடியாக இருக்கின்றன.
இந்தியாவின் ரூபே சேவையை அறிமுகம் செய்ய இருப்பதாக மாலத்தீவு அரசு அறிவித்துள்ளது . மாலத்தீவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முகமது சயீத் இந்த தகவலை வெளியிட்டார். இந்தியா மற்றும் சீனா ஆகிய தேசங்கள் மாலத்தீவின் உள்ளூர் நாணயத்தை பயன்படுத்த ஒப்புக் கொண்டுள்ளன என தெரிவித்தார். அப்போது, இந்தியாவின் ரூபே கார்டுகள் மாலத்தீவிலும் அறிமுகம் செய்யப்படுவதாக அறிவித்தார்.

இந்த நடவடிக்கை மாலத்தீவின் ரூஃபியாவை (rufiyaa) மென்மேலும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கிறோம் என சயீத் நம்பிக்கை தெரிவித்தார். இருப்பினும் எந்த தேதியில் இருந்து ரூபே கார்டுகள் மாலத்தீவில் செல்லுபடியாகும் என்ற அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
அமெரிக்க டாலர் மீதான சார்பின்மையை குறைத்து பிராந்திய நிதி ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில் இனி மாலத்தீவு, இந்தியா மற்றும் சீனாவுடன் நெருக்கமாக செயல்பட முடிவெடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இதன் ஒரு பகுதியாக இந்தியாவின் ரூபே கார்டுகள் மாலத்தீவில் அறிமுகம் செய்யப்படுகின்றன என அவர் கூறியுள்ளார்.
என்பிசிஐ உருவாக்கிய ரூபே தற்போது இந்தியாவின் முதன்மையான அட்டை கட்டண வலையமைப்பாக செயல்பட்டு வருகிறது. ஏடிஎம்கள், விற்பனை நிலையங்கள் மற்றும் ஈ காமர்ஸ் தளங்களில் ரூபே கார்டுகள் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
தற்போது பூடான், நேபாளம், மொரிசியஸ், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் ரூபே கார்டுகள் ஏற்கப்படுகின்றன. அந்த வகையில் தற்போது மாலத்தீவும் இந்த பட்டியலில் சேர உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே மாலத்தீவு அரசாங்கம் சீனாவுடன் நெருக்கமான உறவில் இருந்து வருகிறது. இதனால் மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் சற்றே விரிசல் ஏற்பட்டது. மாலத்தீவுக்கு இந்தியர்கள் சுற்றுலா செல்வது கூட குறைந்தது. ஆனால் தற்போது மாலத்தீவு மீண்டும் இந்தியாவுடன் நெருங்கி வருகிறது. இதன் ஒரு முக்கிய மைல்கல்லாக தான் ரூபே அறிமுகமும் பார்க்கப்படுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications