கிரெடிட் கார்டு என்றாலே பலருக்கும் ஒருவித பயம் இருக்கும். கடன் சுமை, அதிக வட்டி, நிதி சிக்கல்கள் போன்ற பிரச்சனைகள் வரும். ஆனால், இந்த பொதுவான கருத்தை முற்றிலும் மாற்றியமைத்துள்ளார் ஹைதராபாத்தை சேர்ந்த மனீஷ் தமேஜா. கிரெடிட் கார்டுகள் கடன் வாங்கும் கருவி அல்ல என்றும் அதை புத்திசாலித்தனமாக பயன்படுத்தினால் அதிக சலுகைகளையும் தரும் ஒரு நிதி சாதனம் என்பதை அவர் உலகிற்கே நிரூபித்து காட்டியுள்ளார். தற்போது அவர் வைத்திருக்கும் கிரெடிட் கார்டுகளின் எண்ணிக்கைக்காகவே கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
மனீஷ் தமேஜா தற்போது உலகில் அதிக எண்ணிக்கையிலான செல்லுபடியாகும் கிரெடிட் கார்டுகளை வைத்திருக்கும் நபராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். அவரிடம் மொத்தம் 1,638 கிரெடிட் கார்டுகள் உள்ளன. இந்த எண்ணிக்கை வெறும் காட்சிப் பொருளுக்காகவோ அல்லது ஆடம்பர செலவுகளுக்காகவோ அல்ல. ஒவ்வொரு கார்டையும் அவர் மிகுந்த நுணுக்கத்துடனும், நிதி அறிவோடும் பயன்படுத்தி வருகிறார்.

சாதாரண மக்கள் ஒன்று அல்லது இரண்டு கிரெடிட் கார்டுகளை வைத்திருப்பதே பெரிய விஷயமாக பார்க்கும்போது, மனீஷ் இத்தனை கார்டுகளை வைத்துள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், இவரது நோக்கமே கடன் வாங்காமல், சலுகைகளை மட்டுமே பயன்படுத்துவதான்.
மனீஷ் தமேஜா, தனது 1,638 கிரெடிட் கார்டுகள் மூலம் ஒருபோதும் கடனில் சிக்கியதில்லை. அதாவது, எந்த கார்டில் கேஷ்பேக் கிடைக்கும், எந்த கார்டில் சிறந்த பயண சலுகைகள் உள்ளன? அல்லது எந்த கார்டு மூலம் ஹோட்டல்களில் அதிக ரிவார்டுகளை பெறலாம் என்று கணக்கிட்டு மட்டுமே அவர் பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறார்.
உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட வங்கியின் கார்டில் எரிபொருளுக்கு அதிக தள்ளுபடி கிடைத்தால், அதற்காக மட்டுமே அந்த கார்டை பயன்படுத்துவார். ஒரு கார்டில் விமானப் பயணங்களுக்கான லாயல்டி பாயிண்டுகள் அதிகம் கிடைத்தால், அந்த கார்டை விமானப் பயணங்களுக்குப் பயன்படுத்துவார். இவ்வாறு ஒவ்வொரு கார்டின் பலனையும் துல்லியமாக பயன்படுத்தியதால், மனீஷ் இன்று எந்தவிதமான கடன் சுமையும் இல்லாமல், மன அழுத்தமும் இல்லாமல் ஸ்மார்ட்டான நிதி நகர்வுகளை மேற்கொண்டு வருகிறார்.
இதுகுறித்து மனீஷ் கூறுகையில், என் வாழ்க்கை கிரெடிட் கார்டுகள் இல்லாமல் முழுமையடையாது என்று நினைக்கிறேன். எனக்கு கிரெடிட் கார்டுகள் என்றால் மிகவும் பிடிக்கும். கடந்த 2016ஆம் ஆண்டில் மத்திய அரசு திடீரென ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தது.
அந்த நேரத்தில் நாடு முழுவதும் ஒரு பெரிய பதட்டம் நிலவியது. புதிய ரூபாய் நோட்டுகளுக்காக வங்கிகள் முன் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால், அப்போது கிரெடிட் கார்டுகள் என் வாழ்க்கையில் ஒரு முக்கியப் பங்கு வகித்தன. நான் பணத்திற்காக வங்கிக்கு அலைய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. கிரெடிட் கார்டுகள் மூலம் நான் டிஜிட்டல் பரிமாற்றம் செய்து மகிழ்ந்தேன்" என்று கூறியுள்ளார்.
கிரெடிட் கார்டு என்பது நீங்கள் வைத்திருக்கும் எண்ணிக்கையில் இல்லை. அதை எவ்வளவு புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துகிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது. பெரும்பாலானோர் கிரெடிட் கார்டை ஒரு ஆபத்தாக கருதும் வேளையில், மனீஷ் அதை ஒரு சாதனமாகவும், செல்வத்தை ஈட்டும் வழியாகவும் மாற்றியுள்ளார். இவரது இந்த கின்னஸ் சாதனை, கிரெடிட் கார்டு பயன்பாட்டை பற்றி மக்களுக்கு ஒரு புதிய கண்ணோட்டத்தை அளித்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications