இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் சமுகவலைதளத்தில் பலரும் பல விதமானக் கருத்துக்களையும், கோபத்தையும், சோகத்தையும், மீம்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நேரத்தில் இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் எனக் கணக்கிட்டுக் காட்டியுள்ளது ஒருவரின் லின்கிடுஇன் பதிவு..
அமெரிக்கா - 33.1 கோடி
ரஷ்யா -14.6 கோடி
ஜெர்மனி - 8.5 கோடி
துருக்கி - 8.4 கோடி
யுகே - 6.8 கோடி
பிரான்ஸ் - 6.5 கோடி
இத்தாலி - 6.1 கோடி
ஸ்பெயின் - 4.7 கோடி
போலாந்து - 3.8 கோடி
ருமேனியா - 1.9 கோடி
நெதர்லாந்து - 1.7 கோடி
கிரீஸ் - 1.7 கோடி
பெல்ஜியம் -1.2 கோடி
செக் குடியரசு - 1.1 கோடி
போர்ச்சுகல் - 1.1 கோடி
சுவீடன் - 1 கோடி
ஹங்கேரி - 1 கோடி
சுவிட்சர்லாந்து - 0.9 கோடி
பல்கேரியா - 0.7 கோடி
டென்மார்க் - 0.6 கோடி
மொத்தம் - 105. 3 கோடி
ஐரோப்பியக் கண்டத்தில் மீதமுள்ள 25 சிறிய நாடுகளின் மொத்த மக்கள் தொகை 6 கோடி (ஐரோப்பாவில் சிறிதும் பெரிதுமாக மொத்தம் 44 நாடுகள் உள்ளது.)
இதன் மூலம் மொத்த மக்கள் தொகை 105.3 கோடி + 6 கோடி = 111.3 கோடி
இதோடு பிரேசில் நாட்டில் 21.2 கோடி மக்கள், அர்ஜென்டினா நாட்டில் 4.45 கோடி
மொத்தம் : 111.3 கோடி + 21.2 கோடி + 4.45 கோடி = 136.5 கோடி
இந்நிலையில் இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 138 கோடி. ஆக அமெரிக்கா, ஐரோப்பா, பிரேசில், ரஷ்யா, அர்ஜென்டினா ஆகிய நாடுகள் அனைத்து நாடுகளிலும் தனித்தனியாகக் கட்டுப்படுத்திய கொரோனா தொற்றை, இந்தியாவில் மொத்தமாகக் கட்டுப்படுத்த வேண்டும்.
இது சாதாரணக் காரியமில்லை எனவும் இப்பதிவிட்ட ரிஷிகா ஷர்மா தெரிவித்துள்ளார்.
ஆனால் இதற்குப் பலரும் எதிர்க்கருத்து தெரிவித்துள்ளனர்.
எது எப்படி இருந்தாலும் இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டியது அரசின் கடமை, இதேபோல் இதில் மக்களின் பங்கு மிக முக்கியமானது என்பதை எந்த வகையிலும் மறுக்க முடியாது.