மன்மோகன் சிங் இந்தியாவின் 14-வது பிரதமராவார். இவர் பஞ்சாபில் பிறந்தவர். அதோடு தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். 2004-ஆம் ஆண்டின், மே 22-ஆம் தேதி அன்று இந்திய பிரதமராக முதல்முறையாக பதவியேற்றார். இவர் ஒரு சீக்கியர். இந்து சமயத்தை சாராத முதல் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஆவார். இவருடைய அரசியல் பயணத்தில் இவர் ஆற்றிய பங்களிப்புகள் பற்பல.
பிறப்பு: மன்மோகன் சிங் இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கிராமத்தில், 1932-ஆம் ஆண்டு, செப்டம்பர் 26-ஆம் தேதி பிறந்தார். 1948-ஆம் ஆண்டு பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் மெட்ரிகுலேஷன் தேர்வை எழுதி முடித்தார்.

அரசியல் வாழ்க்கை: மன்மோகன் சிங் 1991-ஆம் ஆண்டு ராஜ்யசபா உறுப்பினரானார். இந்த ஆண்டு தொடக்கத்தில் ராஜ்யசபாவில் இருந்தும் தனது ஓய்வை அறிவித்தார். 33 ஆண்டுகளுக்கு மேல் தனது அரசியல் பயணத்தை தொடர்ந்தவர் மன்மோகன் சிங். இவர் பல சர்வதேச மாநாடுகளிலும், சர்வதேச அமைப்புகளிலும் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
1993-ஆம் ஆண்டில் சைப்ரஸ் நாட்டில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டிற்கும், அதே ஆண்டில் வியன்னா நகரில் நடைபெற்ற உலக மனித உரிமைகள் மாநாட்டிற்கும் இந்தியாவை அவர் வழிநடத்தினார். பிரதமராக மன்மோகன் சிங் எடுத்த முக்கிய முடிவுகளில் ஒன்று 100 நாட்கள் கூலி வேலை வாய்ப்பை உறுதி செய்யும் "மகாத்மா காந்தி நேஷனல் ரூரல் எம்பிளாய்மெண்ட் கேரண்டி ஆக்ட்" ஆகும். இதன் மூலம் பல்வேறு நபர்கள் பலனடைந்தனர்.
இவருடைய அரசாங்கத்தில் 2005-ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. 2013-ஆம் ஆண்டில் மன்மோகன் சிங் அவர்களின் அரசாங்கம் இந்தியாவின் மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு மானிய விலையில் உணவு தானியங்களை வழங்குவதற்காக தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை அறிமுகம் செய்தது.
கல்வி: மன்மோகன் சிங் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு படிக்கச் சென்றார். அங்கு பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். 1962-ஆம் ஆண்டு நஃபீல்ட் பல்கலைக்கழகத்தில் உள்ள கல்லூரியில் பொருளாதாரத்தில் D. Phil பட்டம் பெற்றார். அவரது புத்தகமான "இந்தியாஸ் எக்ஸ்போர்ட் ட்ரெண்ட்ஸ் அண்ட் ப்ராஸ்பெக்ட்ஸ் ஃபார் செல்ஃப் கிரௌத்" இந்தியாவின் வர்த்தகக் கொள்கையின் ஆரம்பகால வளர்ச்சிக்கு வித்திட்டது.
More From GoodReturns

ஈரான் போர்: பல ஆயிரம் கோடிகளை இழந்த இந்திய விமான நிறுவனங்கள்!! நிலைமை இன்னும் மோசமடையுமா?

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!



Click it and Unblock the Notifications