வியாழக்கிழமை இரவு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவு நாடே துக்கத்தில் ஆழ்ந்துள்ளது. இந்த நிலையில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், மத்திய அரசு 7 நாள் தேசிய துக்கம் அனுசரித்துள்ளது. இந்த 7 நாளில், அனைத்து அதிகாரப்பூர்வ அரசாங்க நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன, மேலும் அனைத்து அரசாங்க கட்டிடங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். இதேபோல் இன்று காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவை கூடி இரங்கல் கூட்டமும் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் காங்கிரஸ் கட்சி அதன் பவுண்டேஷன் தின விழா உள்ளிட்ட அனைத்து அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளையும் அடுத்த ஏழு நாட்களுக்கு ரத்துள்ளதாகவும், 7 நாள் துக்கம் அனுசரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

தேசிய துக்கம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டிசம்பர் 27 வெள்ளிக்கிழமை வங்கி செயல்பாடுகளின் நிலை குறித்து பலர் கேள்வி எழுப்பியுள்ளனர். அரசு அனைத்து அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ள நிலையில், இந்த கேள்வி எழுந்துள்ளது. ஆனால் வங்கிகளை மூடுவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் தற்போது வெளியாகவில்லை. இதேபோல் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக எந்த அறிவிப்பும் வரவில்லை.
தெலுங்கானா, கர்நாடகா: முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், தெலுங்கானா மற்றும் கர்நாடகா அரசுகள் டிசம்பர் 27-ம் தேதியை பொது விடுமுறை தினமாக அறிவித்துள்ளன. ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் அனைத்தும் இன்று மூடப்படும். மேலும், முன்னாள் பிரதமரின் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில், கர்நாடகா முதல்வர் சித்தரமய்யா ஏழு நாள் துக்க காலத்தை அறிவித்துள்ளார்.
இந்தியாவில் வங்கி விடுமுறைகள் ஒவ்வொரு மாநிலத்திற்கு வேறுபடுகின்றன, சில விடுமுறைகள் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கூடுதலாக, வங்கிகள் பொதுவாக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும்.
இருப்பினும், வங்கி விடுமுறை நாட்களிலும், டிஜிட்டல் வங்கி சேவைகள் அணுகக்கூடியதாக இருக்கும் என்பதால் மக்களின் அடிப்படை வங்கி சேவைகள் இதன் வாயிலாக பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இதற்கு ஏற்றார் போல் வங்கிகளும் விடுமுறை நாட்களுக்கு ஏற்ப ஏடிஎம்-களில் அதிக பணத்தை லோடு செய்வது, டிஜிட்டல் வங்கி சேவை பாதிக்க கூடாது என்பதற்காக சர்வர்-ஐ கணிகாணிப்பை அதிகரிப்பது போன்ற அடிப்படை நடவடிக்கைகளை எடுக்கும்.
வாடிக்கையாளர்கள் ஆன்லைன் பேங்கிங் பிளாட்ஃபார்ம்கள், மொபைல் பேங்கிங் ஆப்ஸ் மற்றும் டிஜிட்டல் பேமெண்ட் முறைகளான UPI, IMPS, NEFT மற்றும் நெட் பேங்கிங் போன்ற பல்வேறு நிதி பரிவர்த்தனைகளுக்கு பில் பேமெண்ட்கள், பணப் பரிமாற்றங்கள் மற்றும் ஆன்லைன் பர்ச்சேஸ்கள் போன்றவற்றை தொடர்ந்து பயன்படுத்தலாம்.
தேசிய துக்கத்தின் போது வங்கி செயல்பாடுகளில் ஏதேனும் தடை இருந்தால், இது தொடர்பான கூடுதல் விவரங்களை உரிய நேரத்தில் மத்திய மாநில அரசுகள் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications