முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் அவர்கள் டிசம்பர் 26ஆம் தேதி டெல்லியின் எய்ம்ஸ் மருத்துவமனையில், தனது 92-வது வயதில் காலமானார். சுமார் 33 ஆண்டுகள் அரசியல் உலகில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பங்காற்றிய மன்மோகன் சிங் இந்திய பொருளாதாரத்தை நிலை நிறுத்துவதில் முக்கிய பங்கு வகித்தவர் என்றுதான் சொல்ல வேண்டும். நிதித்துறை அமைச்சர், இந்திய பொருளாதார ஆலோசகர், ரிசர்வ் வங்கி ஆளுநர் என பல்வேறு முக்கிய பதவிகளில் பணிபுரிந்தவர் மன்மோகன் சிங்.
இந்திய அரசியலில் தலைசிறந்த நபராக விளங்கிய மன்மோகன் சிங் 2004-ஆம் ஆண்டு முதல் 2009-ஆம் ஆண்டு வரையிலும், அதன் பிறகு மீண்டும் 2009-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரையிலும் சுமார் 2 முறை பிரதமராக பணியாற்றியவர். அவருடைய பதவி காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை என்னென்ன பாதைகளில் எல்லாம் வலுப்படுத்தலாமோ? அதற்கெல்லாம் முக்கிய பங்காற்றினார். இவர் பிரதமராக இருந்த காலத்திற்கு முன்பு பி.வி நரசிம்மராவ் அரசாங்கத்தில் நிதி அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

மன்மோகன் சிங்கின் நிகர மதிப்பு: 2018-ஆம் ஆண்டு மன்மோகன் சிங் ராஜ்ய சபா பதவிக்காக வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது அவருடைய சொத்துக்கள் சார்ந்த விவரங்களும் தாக்கல் செய்யப்பட்டது. அதில் மன்மோகன் சிங்கின் மொத்த சொத்து மதிப்பு ரூ.15.77 கோடி என தெரிவிக்கப்பட்டிருந்தது. டெல்லி, சண்டிகர் ஆகிய 2 நகரங்களிலும் அவருக்கு சொந்தமாக வீடுகள் இருப்பதும் இதன் வாயிலாக தெரியவந்துள்ளது. கூடுதலாக மன்மோகன் சிங் எந்த கடனிலும் இல்லை. இது அவருடைய நேர்த்தியான நிதி மேலாண்மையை கடன் இல்லாமல் இருப்பது வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
அதோடு 2018-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மன்மோகன் சிங்கின் மொத்த வருமானம் ரூ. 90 லட்சம் என்றும் கூறப்படுகிறது. அவரது குடியிருப்பு சொத்துக்கள் மற்றும் பிக்சட் டெபாசிட்களைத் தவிர டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மதிப்பு 11 ஆண்டுகளுக்கு முன்பே ரூ. 7.27 கோடியாக இருந்தது.
ஆனால் தற்போதைய மதிப்பு குறித்த விவரங்கள் தெரியவில்லை. 2013-ஆம் ஆண்டில் அவர் தனது எஸ்பிஐ கணக்கில் மொத்தமாக ரூ.3.46 கோடி டெபாசிட் செய்திருந்தார். மேலும் மன்மோகன் சிங்குக்கு எந்த கடன்களும் இல்லை என்பதும் அவர் தாக்கல் செய்த அப்பிடவிட்டில் தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் 30 ஆயிரம் ரூபாய் 3.86 லட்சம் மதிப்புள்ள நகைகளும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 2013-ஆம் ஆண்டு தபால் சேமிப்புத் திட்டத்தில் 12,76,000 ரூபாயையும் மன்மோகன் சிங் வைத்திருந்தார்.
More From GoodReturns

ஈரான்-இஸ்ரேல் மோதல்: இந்தியாவுக்கு தான் பெரிய பாதிப்பு.. அடுத்தடுத்து நடக்கும் பாதிப்பு..!!

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

பட்ஜெட் மாசத்துல மத்திய அரசுக்கு பணமழை: 8% உயர்ந்த ஜிஎஸ்டி வருவாய்!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!



Click it and Unblock the Notifications