இந்திய ஸ்மார்ட்போன் விற்பனையில் ஆன்லைன் விற்பனை மூலம் பெரும் பெரும் புரட்சியைச் செய்த சியோமி நிறுவனத்தின் மனு குமார் ஜெயின் இந்திய சந்தை தலைவர் பதவியில் இருந்து சர்வதேசச் சந்தை வர்த்தகத்தில் முக்கியப் பொறுப்பைச் சில மாதங்களுக்கு முன்பு தான் பதிவி உயர்வு பெற்றார்.
இவர் இந்திய வர்த்தகப் பொறுப்பில் இருந்து வெளியேறிய நாளில் இருந்து பல வர்த்தகத் தடுமாற்றங்கள் இந்திய வர்த்தகத்தில் உருவானது மட்டும் அல்லாமல் சீன ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பல்வேறு நிதி மோசடிகள் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த நிலையில் மனு குமார் ஜெயின் தற்போது சியோமி நிறுவனத்தின் வர்த்தகத்தில் இருந்து மொத்தமாக வெளியேற உள்ளதாக அறிவித்துள்ளார்.
சியோமி
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி-யின் இந்தியா பிரிவின் முன்னாள் தலைவரும் தற்போது சர்வதேச வர்த்தகத்தின் துணை தலைவராக இருக்கும் மனு குமார் ஜெயின் சுமார் ஒன்பது வருடம் Xiaomi குழுமத்தில் பணியாற்றிவிட்டுத் தற்போது மொத்தமாக விலகியுள்ளார்.
மனு குமார் ஜெயின்
மனு குமார் ஜெயின் லின்கிடுஇன் தளத்தில் மிகவும் ஆக்டிவ் ஆக இருப்பது அனைவருக்கும் தெரியும் நிலையில், சியோமி நிறுவனத்தை விட்டு 9 ஆண்டுகளுக்குப் பின்பு வெளியேறுவது குறித்து முக்கியமான பதிவை வெளியிட்டு உள்ளார்.
ஸ்டார்ட்அப்
இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் மற்றொரு நிறைவான சவாலை எதிர்கொள்ளும் நிறுவனத்துடன் மீண்டும் வருவதற்குள் சிறிய ஓய்வு எடுக்கப் போவதாகக் கூறியுள்ளார். இதன் மூலம் மனுகுமார் ஜெயின் இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் நுழைய உள்ளார்.
ஒன்பது ஆண்டுகள்
ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, நான் சியோமி குழுமத்திலிருந்து வெளியேறுகிறேன். உலகெங்கிலும் வலுவான தலைமை நிர்வாகக் குழுக்கள் இருப்பதால், நிறுவனத்தை விட்டு வெளியேற சரியான நேரம் என்று நான் நம்புகிறேன் என்று மனு குமார் ஜெயின் தெரிவித்துள்ளார்.
துபாய்
2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய தலைவர் பதவியை விடுத்து துபாய்க்குச் சென்று உத்திகள் மற்றும் வளர்ச்சியைக் கவனிக்கும் சியோமி சர்வதேச துணைத் தலைவராகப் பணியாற்றத் துவங்கினார். தற்போது மொத்தமாக நிறுவனத்தை விட்டு வெளியேறுகிறார்.
முகேஷ் அம்பானி
மனு குமார் ஜெயின் சமீபத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியை தனிப்பட்ட முறையில் சந்தித்தார். இந்தச் சந்திப்பில் பல முக்கியமான விஷயங்களைக் கற்றதாகவும், இந்தச் சந்திப்புக்கு மிகவும் நன்றி எனவும் தெரிவித்தார்.
ரிலையன்ஸ், டாடா
இதனால் ரிலையன்ஸ் நிறுவனத்தில் மனு குமார் ஜெயின் சேர வாய்ப்பு உள்ளது. இதேவேளையில் டாடா நியூ தலைவர் பதவி தற்போது காலியாக உள்ளது.
ஆனால் மனு குமார் ஜெயின் இந்தியா ஸ்டார்ட்அப் துறையில் இறங்குவதாக அறிவித்துள்ளார். இதனால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications