பிரதமர் நரேந்திர மோடி அரசின் மூன்றாவது பதவிக்காலத்தில், உற்பத்தித் துறை முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டிய துறைகளில் ஒன்றாக உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 17 சதவீத பங்களிப்பையும், அதிகளவிலான வேலைவாய்ப்புகளையும் உருவாக்குவதன் மூலம், இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக விளங்கும் இத்துறைக்கு பட்ஜெட்டில் முக்கியமான அறிவிப்புகள் வர வாய்ப்பு உள்ளது..
“Make in India” திட்டம் மூலமாகவும், உற்பத்தி இணைப்பு ஊக்கத்தொகை (Production Linked Incentive - PLI) திட்டம் மூலமாகவும் இந்திய அரசு எடுத்த முயற்சிகள் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்கப் பங்காற்றியுள்ளது. இதுமட்டும் அல்லாமல் உலகிலேயே வேகமாக வளர்ச்சி பெறும் நாடாக இந்தியாவை உருவாக்கியுள்ளது.

இந்திய பொருளாதாரம் சேவை துறையை மட்டுமே நம்பியிருந்த வேளையில், உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சார்ந்த நாடாக மாற வேண்டும் என்ற முக்கிய இலக்கிற்கு மேக் இன் இந்தியா மற்றும் PLI திட்டம் வலு சேர்த்தது. இதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கும் வேளையில், இந்த வேகத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கும், இந்தியாவை சுயசார்பு (Atma Nirbhar) நாடாக மாற்றுவதற்கும், இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் அதிரடியான திட்டங்களை தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர்.
இதற்காக தொழில்துறையினர் முன்வைக்கப்படும் முக்கிய கோரிக்கைகளில் ஒன்று, PLI திட்டத்தின் கீழ் புதிய துறைகளைச் சேர்த்து மொத்தமாக விரிவுபடுத்துவது. குறிப்பாக, அதிகளவிலான தொழிலாளர்கள் தேவைப்படும் துறைகளுக்கும், சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுடன் அதிகப்படியான இணைப்பு கொண்ட துறைகளுக்கும் இந்தத் PLI திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையை தொழில்துறையினர் முன்வைக்கின்றனர்.
உதாரணமாக, விளையாட்டுப் பொருட்கள், காலணிகள், மரச்சாமான்கள், மின்சார சைக்கிள், நகைகள் மற்றும் கைவினைப்பொருட்கள் ஆகிய துறைகளுக்கு இந்த PLI திட்டத்தை விரிவுபடுத்துவது இந்திய உற்பத்தியை மேம்படுத்தும் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் சாத்தியமாகுமா என்பது பட்ஜெட் அறிவிப்பில் தான் தெரிய வரும்.
PLI திட்டத்திற்கு கூடுதலாக, வரிச் சலுகைகள், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் எளிதான வணிகச் சூழலை உருவாக்குதல் ஆகிய நடவடிக்கைகளையும் தொழில்துறையினர் எதிர்பார்க்கின்றனர். இதன் மூலம், உற்பத்திச் செலவைக் குறைத்து, உலகளாவிய சந்தையில் போட்டித்திறனுடன் செயல்பட முடியும் எனவும் தொழிற்துறையினர் கூறுகின்றனர்.
இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் உற்பத்தித் துறை வலுப்பெறுவது அவசியம். இந்த நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் உற்பத்தி துறைக்கு மத்திய அரசு எவ்வாறான திட்டங்களை அறிவிக்கும் என்பதை பொறுத்தே பார்க்க முடியும்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications