தமிழ்நாட்டுக்கு ஓடி வரும் பெங்களூர் நிறுவனங்கள்..!! இதை விட வேற என்ன வேணும் சொல்லுங்க..!

இந்தியாவின் பெரிய உற்பத்தி மையமாக தமிழ்நாடு படிப்படியாக மாறி வருகிறது. இருசக்கர வாகன உற்பத்தி , கார்கள் உற்பத்தி மற்றும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி, காலணி என தொடர்ச்சியாக பல்வேறு துறைகளிலும் தமிழ்நாடு தேசிய அளவில் முன்னிலையில் தான் இருந்து வருகிறது.

தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழல் நிலவுவதே இதற்கு முக்கிய காரணம். மனித வளம் ,அரசு வழங்கக்கூடிய சலுகைகள் , ஏற்றுமதி இறக்குமதிக்கு தேவையான வசதிகள் என பலவும் நிரம்பி இருப்பதால் பல்வேறு நிறுவனங்களும் ஓடி வந்து தமிழ்நாட்டில் முதலீடு செய்து வருகின்றன . தமிழ்நாடு அரசும் முதலீடு சென்னை நகரத்துடன் நின்று விடக்கூடாது மாநிலத்தின் அனைத்து நகரங்களிலும் பரவலாக வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது.

தமிழ்நாட்டுக்கு ஓடி வரும் பெங்களூர் நிறுவனங்கள்..!! இதை விட வேற என்ன வேணும் சொல்லுங்க..!

இதன் ஒரு பகுதியாக தான் அனைத்து மாவட்டங்களிலும் டைடல் பார்க்குள் , தொழில் பூங்காக்கள் அமைக்கும் பணிகளை தமிழ்நாடு அரசு ஒருபுறம் தீவிரப்படுத்தி வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலினும் கூட அண்மையில் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு தமிழ்நாட்டிற்கு பல ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகளை ஈர்த்து வந்தார்.

இந்த சூழலில் தான் பெங்களூருவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படக்கூடிய பல்வேறு நிறுவனங்களும் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வந்திருப்பது தெரிய வந்திருக்கிறது. பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்படக்கூடிய நான்கு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் பெரிய அளவில் முதலீடு செய்ய உள்ளன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளன.

ஜெட்வெர்க் (Zetwerk ) என்ற நிறுவனம் பெங்களூருவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படுகிறது . எலக்ட்ரானிக்ஸ், டிஃபென்ஸ், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்றவற்றுக்கான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தித் தருகிறது இந்த நிறுவனம். கூடிய விரைவில் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தன்னுடைய உற்பத்தி ஆலையை நிறுவ இருக்கிறது. 5 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் சோலார் செல் ஆலையை இந்த நிறுவனம் அமைக்க இருக்கிறது . இதன் மூலம் தமிழ்நாட்டில் 3 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகப்பட இருக்கின்றன.

அதேபோல ஹை க்யூ (HiQ) எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது . இந்த நிறுவனமும் தமிழ்நாட்டில் 425 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருக்கிறது. தங்களுடைய பிஜிபி உற்பத்தி ஆலையை ஓசூரில் அமைக்க இருக்கிறது . இதன் மூலம் சுமார் 400 வேலை வாய்ப்புகள் ஓசூரில் உருவாக இருக்கின்றன.

ஏஎஸ்எம் (ASM) டெக்னாலஜிஸ் என்ற நிறுவனமும் தமிழ்நாட்டில் குறிப்பாக ஓசூரில் தங்களுடைய எல்இடி எக்யூப்மென்ட் டிசைன் மற்றும் உற்பத்தி ஆலையை நிறுவ இருக்கிறது. 250 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படும் இந்த ஆலையில் 1100 வேலை வாய்ப்புகள் உருவாக இருக்கின்றன. அதேபோல டொயோட்டா (Toyota Boshoku) நிறுவனம் 450 கோடி ரூபாய் முதலீட்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்திலேயே உற்பத்தி ஆலை அமைக்க முன் வந்திருக்கிறது.

பெங்களூருவுக்கு மிக அருகிலேயே இருப்பதால் இந்த நிறுவனங்கள் ஓசுரில் உற்பத்தி ஆலை அமைப்பது தங்களுக்கு சௌகரியமாக இருக்கும் என கருதுகின்றன. இவை ஓசூருக்கு பொருளாதார ரீதியான வளர்ச்சியை கொடுக்கும். இது தவிர வேலைவாய்ப்புகளையும் பெருக்க உள்ளன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+