இந்தியாவில் இருந்து கடந்த 5 வருடத்தில் சுமார் 6 லட்சம் பேர் வெளிநாட்டில் குடியுரிமை பெற்ற காரணத்தால் இந்தியக் குடியுரிமையை விடுத்துள்ளனர்.
அப்படிக் குடியுரிமை வேண்டாம் என அறிவித்துள்ள இந்திய மக்களில் சுமார் 40 சதவீதம் பேர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்து உள்ளனர். அமெரிக்காவிற்கு அடுத்தாக ஆஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகள் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியா வேண்டாம்..?!
வர்த்தகம், சிறப்பான வாழ்க்கைத் தரம், கல்வி, பிள்ளைகளின் எதிர்காலம், குறைவான வரி, கொண்டாட்டம் எனப் பல காரணத்திற்காக இந்தியர்கள் தற்போது வெளிநாடுகளுக்குக் குடியுரிமை பெற்று வருகின்றனர்.
தனிநபர் பணக்காரர்கள்
மேலும் இந்திய குடியுரிமையை விடுத்து வெளிநாட்டில் குடியுரிமை பெறுவது பெரும்பாலும் HNI எனப்படும் தனிநபர் பணக்காரர்கள் தான். மேலும் இந்தியாவில் இருந்து தற்போது அதிகமானோர் போர்ச்சுகல், மால்டா அல்லது சைப்ரஸ் ஆகிய நாடுகளில் முதலீடு செய்வதன் மூலம் கிடைக்கும் கோல்டன் விசாவை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
30 நாடுகள்
உலகில் சுமார் 30 நாடுகளில் முதலீட்டு அடிப்படையில் கோல்டன் விசா அளிக்கப்படுகிறது. இத்தகைய விசா அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளிலும் உள்ளது. அமெரிக்காவில் விரைவாகக் குடியுரிமை வேண்டும் என விரும்புவோர் EB-5 விசா முறையைத் தேர்வு செய்கிறார்கள்.
6 லட்சம் பேர்
கடந்த 5 வருடத்தில் இந்திய குடியுரிமை வேண்டாம் என அறிவித்துள்ள 6 லட்சம் பேருக்கும் இந்திய பாஸ்போர்ட்-ஐ அரசிடம் திரும்ப ஒப்படைத்துள்ளனர். அதாவது இந்த 6 லட்சம் பேருக்கும் இரட்டை குடியுரிமை கிடையாது. ஆனால் இவர்களால் ஓவர்சீஸ் சிட்டிசன் ஆப் இந்தியா கார்ட்-ஐ பெற்று இந்தியாவில் தங்கவும், வேலை பார்க்கவும், வர்த்தகம் செய்யவும் முடியும்.
தொடர் அதிகரிப்பு
இப்படி இந்தியாவில் இருந்து வெளியேறும் மக்களின் எண்ணிக்கை 2017 முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் முக்கியமாக 2019ஆம் ஆண்டில் சுமார் 1,44,017 பேர் இந்தியக் குடியுரிமையைக் கைவிட அரசிடம் கோரிக்கை வைத்தனர். 2020ல் இதன் எண்ணிக்கை 85,248 ஆகக் குறைந்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போர்: மத்திய கிழக்கு நாடுகளில் இருக்கும் அமெரிக்கர்களுக்கு டிரம்ப் அரசு முக்கிய உத்தரவு!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications