பிரதமர் நரேந்திர மோடி பிஹாரில் ரூ.1.64 லட்சம் கோடி மதிப்புள்ள திட்டங்களுக்கு மார்ச் 2 ஆம் தேதியன்று அடிக்கல் நாட்டுகிறார்.
பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, ரயில்வே மற்றும் உரம் போன்ற பல்வேறு துறைகளில் பரவியுள்ள இந்தத் திட்டங்கள் பீகாரில் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் மத்திய அரசின் ஈடுபாட்டை எடுத்துரைப்பதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெட்ரோலியத் துறையில், 1.49 லட்சம் கோடி ரூபாய் செலவில் மொத்தம் 39 திட்டங்கள் துவக்கப்படுகின்றன. 39 திட்டங்களில், 80,000 கோடி ரூபாய் மதிப்பிலான 29 திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார். 60,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவில் 10 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார்.
உள்கட்டமைப்பு மேம்பாடுகளை விரைவுபடுத்துதல், உற்பத்தித் திறனை அதிகரிப்பது மற்றும் எரிசக்தி விநியோக வலையமைப்புகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் பெட்ரோலியத் துறையில் புரட்சியை ஏற்படுத்த திட்டங்கள் தயாராக உள்ளன.
இந்த நிதி பெட்ரோலிய துறையில் புரட்சி, உள்கட்டமைப்பில் முன்னேற்றங்களை விரைவுபடுத்துதல், உற்பத்தி திறன்களை அதிகரித்தல் மற்றும் எனர்ஜி நெட்வொர்க்குகளின் ஒட்டுமொத்த செயல்திறனை அதிகரிக்கிறது என்று அந்த அதிகாரி கூறினார்.
பெட்ரோலியத் துறை திட்டங்களின் சிறப்பம்சமாக ஓஎன்ஜிசியின் க்ளஸ்டர்-2 கேஜி-டிடபிள்யூஎன்-98/2 திட்டத்தின் துவக்கம், இந்தியாவின் எரிசக்தி துறையில் வரலாற்று மைல் கல்லாகும்.
ஜனவரி 7 ஆம் தேதி தயாரிக்கப்பட்ட கேஜி பேசின் ஃபர்ஸ்ட் ஆயிலை பிரதமர் அர்ப்பணிக்கிறார்.
ஓஎன்ஜிசி கிருஷ்ணா கோதாவரி ஆழ்கடல் திட்டத்தில் இருந்து கர்நாடகாவின் எம்ஆர்பிஎல் மங்களூருக்கு முதல் கச்சா எண்ணெய் டேங்கரை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இது இந்தியாவின் எரிசக்தி துறையில் வரலாற்று சாதனையாக உள்ளது.
இந்த திட்டத்தால் ஓஎன்ஜிசியின் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி முறையே 11 மற்றும் 15 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கேஜி பேசினில் இருந்து 'ஃபர்ஸ்ட் ஆயில்' உற்பத்தி தொடங்கப்பட்டு, முதல் கச்சா எண்ணெய் டேங்கர் இயக்கப்படும். இந்தத் திட்டம் நாட்டின் எரிசக்தி இறக்குமதி சார்ந்திருப்பதை கணிசமாகக் குறைக்கும்.
அத்துடன், விசாக் சுத்திகரிப்பு நவீனமயமாக்கல் திட்டம் மற்றும் மும்பை உயர் வடக்கு மறுவடிவமைப்பு கட்டம் IV போன்ற திட்டங்கள் ஆற்றல் தன்னிறைவு மற்றும் நிலைத்தன்மையை நோக்கிய இந்தியாவின் முன்னேற்றத்துக்கு அச்சாரமாக உள்ளன.
பிஹாரில், ஹிந்துஸ்தான் உர்வரக் & ரசாயன் லிமிடெட் (HURL) ஆலையின் திறப்பு விழா, 7,042 கோடி ரூபாய் முதலீட்டில், பாரௌனியில், விவசாய நிலப்பரப்பை மாற்றத் தயாராக உள்ளது.
இந்த யூனிட் 12.7 லட்சம் MTPA யூரியாவை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும்.
மற்றொரு அரசு அதிகாரி கூறுகையில், இந்த வசதி விவசாயிகளுக்கு நிலையான யூரியாவை வழங்குவதோடு, இடுபொருள் செலவுகளைக் குறைத்து பயிர் விளைச்சலை அதிகரிக்கும். குறிப்பிடத்தக்க ரயில்வே மேம்பாடுகள், ரூ.4,742 கோடி மதிப்பிலான திட்டங்களுடன், மாநிலத்தில் இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்தி, பொருளாதார வளர்ச்சி மற்றும் வாழ்வாதார வாய்ப்புகளை மேலும் அதிகரிக்கும்.
பிரதமர் மோடி 6 ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைப்பார். நர்கதியாகஞ்ச்-கௌனாஹா ரயில் பாதை மாற்றத்தை தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டம் ஜெய்நகர்-தர்பங்கா-நர்கதியாகஞ்ச்-பிட்க்நாதோரி கேஜ் மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் நேபாள எல்லையில் உள்ள நர்கதியாகஞ்ச் இணைப்பை அதிகரிக்க இந்த திட்டம் உதவும்.
ரகோபூர்-ஃபோர்பேஸ்கஞ்ச் பாதை மாற்றம் மற்றும் ஹாஜிபூர்-பச்வாரா இரட்டிப்பு ஆகியவற்றையும் பிரதமர் அர்ப்பணிக்கிறார்.
பிஹாரில் ரயில்வே திட்டங்களுக்கு பட்ஜெட்டில் மொத்தம் ரூ.10,032 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
39 திட்டங்களில், 80,000 கோடி ரூபாய் மதிப்பிலான 29 திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைப்பார். 60,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவில் 10 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார்.
Story Written by: I. Jayachandran
More From GoodReturns

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

10 கிராம் தங்கம் 2 லட்சம் வரை உயர வாய்ப்பு..! தங்கம் $6000, வெள்ளி $100 எட்டுமா?

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!



Click it and Unblock the Notifications