மும்பை: மிக அரிய நிகழ்வாக ஞாயிற்றுக்கிழமை அன்று வங்கிகள் செயல்படும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மார்ச் 31ஆம் தேதியுடன் நிதியாண்டு முடிவடைகிறது. எனவே வங்கிகள், வருமான வரித்துறை மற்றும் அரசு அலுவலகங்களில் நிதி சார்ந்த பணிகளை மார்ச் 31ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
வழக்கமாக மார்ச் 31ஆம் தேதியான நிதியாண்டின் கடைசி நாளில் வங்கிகள் செயல்படும். ஆனால் இந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. எனவே வங்கிகள் செயல்படுமா என்ற சந்தேகம் எழுந்தது.

இந்த சூழலில், மார்ச் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வங்கிகள் வழக்கம் போல செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசு பரிவர்த்தனைகளை கையாளும் அனைத்து ஏஜென்சிகள் மற்றும் வங்கிகளுக்கும் மார்ச் 31ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
2023 - 24ஆம் நிதியாண்டில் நடைபெற்ற அனைத்து அரசாங்க பரிவர்த்தனைகளுக்கும் ரசீது அல்லது பணப்பரிவர்த்தனைகள் மூலம் கணக்கு வைப்பதற்காக மார்ச் 31ஆம் தேதி அன்று வங்கிகள் வழக்கம் போல செயல்படும் என ரிசர்வ் வங்கியின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை வங்கி செயல்படும் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
நிலுவையில் உள்ள வரி தொடர்பான பணிகளை கருத்தில் கொண்டு மார்ச் 29 முதல் 31 வரையிலான நீண்ட வார விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது. வழக்கம் போல வருமான வரி அலுவலகங்கள் அனைத்தும் மார்ச் 29 ,30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின் பெயரில் மார்ச் 31ஆம் தேதி வங்கிகள் செயல்பட்டாலும் பொதுமக்களுக்கான சேவைகளை வழங்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசு சம்பந்தப்பட்ட ரசீதுகளை சரி செய்வதற்கான பணிகளில் தான் ஈடுபடும் என தெரிய வந்துள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications