மும்பை: மிக அரிய நிகழ்வாக ஞாயிற்றுக்கிழமை அன்று வங்கிகள் செயல்படும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மார்ச் 31ஆம் தேதியுடன் நிதியாண்டு முடிவடைகிறது. எனவே வங்கிகள், வருமான வரித்துறை மற்றும் அரசு அலுவலகங்களில் நிதி சார்ந்த பணிகளை மார்ச் 31ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
வழக்கமாக மார்ச் 31ஆம் தேதியான நிதியாண்டின் கடைசி நாளில் வங்கிகள் செயல்படும். ஆனால் இந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. எனவே வங்கிகள் செயல்படுமா என்ற சந்தேகம் எழுந்தது.

இந்த சூழலில், மார்ச் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று வங்கிகள் வழக்கம் போல செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அரசு பரிவர்த்தனைகளை கையாளும் அனைத்து ஏஜென்சிகள் மற்றும் வங்கிகளுக்கும் மார்ச் 31ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
2023 - 24ஆம் நிதியாண்டில் நடைபெற்ற அனைத்து அரசாங்க பரிவர்த்தனைகளுக்கும் ரசீது அல்லது பணப்பரிவர்த்தனைகள் மூலம் கணக்கு வைப்பதற்காக மார்ச் 31ஆம் தேதி அன்று வங்கிகள் வழக்கம் போல செயல்படும் என ரிசர்வ் வங்கியின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை வங்கி செயல்படும் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
நிலுவையில் உள்ள வரி தொடர்பான பணிகளை கருத்தில் கொண்டு மார்ச் 29 முதல் 31 வரையிலான நீண்ட வார விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை ஏற்கனவே அறிவித்துள்ளது. வழக்கம் போல வருமான வரி அலுவலகங்கள் அனைத்தும் மார்ச் 29 ,30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின் பெயரில் மார்ச் 31ஆம் தேதி வங்கிகள் செயல்பட்டாலும் பொதுமக்களுக்கான சேவைகளை வழங்காது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசு சம்பந்தப்பட்ட ரசீதுகளை சரி செய்வதற்கான பணிகளில் தான் ஈடுபடும் என தெரிய வந்துள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications