மும்பை: 2023-24ஆம் நிதியாண்டு மார்ச் 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. வழக்கமாக ஆண்டுதோறும் நிதியாண்டின் இறுதி நாளில் வங்கிகள் மற்றும் வருமான வரித்துறை அலுவலகங்கள் வழக்கம் போல செய்யப்படும்.
ஆனால் இந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதால் அன்றைய தினம் வங்கிகள் செயல்படுமா என்ற குழப்பம் ஏற்பட்டது. ஞாயிற்றுக்கிழமை என்றாலும் மார்ச் 31ஆம் தேதி வழக்கம் போல வங்கிகள் செயல்படும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிட்டது.

குறிப்பாக வருமான வரி துறை சார்ந்த செயல்கள் மற்றும் அரசின் ரசீதுகளை கிளியர் செய்வது போன்ற பணிகளுக்காக வங்கிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்திய ரிசர்வ் வங்கி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்களின்படி டிபிஎஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பந்தன் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகள் வழக்கம் போல செயல்பட உள்ளன.
12 பொதுத்துறை வங்கிகள், 20 தனியார் வங்கிகள் மற்றும் ஒரு வெளிநாட்டு வங்கி ஆகியவை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்பட்டாலும் பொதுமக்கள் தங்களது வழக்கமான வங்கிப் பணிகளை மேற்கொள்ள முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இது தொடர்பாக பொதுமக்கள் சேவை குறித்து வங்கிகளை தொடர்பு கொண்டு கேட்டதற்கு எந்த விளக்கமும் கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பந்தன் வங்கி மட்டும் தங்களுடைய வங்கிகள் 31ஆம் தேதி வழக்கம் போல செயல்படும் என கூறியதாக எக்னாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
தனி நபர்கள் வருமான வரி சம்பந்தமான சலான்கள் ஆகியவற்றை செலுத்துவதற்கு வங்கிக்கு வருகை தரலாம் என்றும் அதேபோல வருமான வரி சேமிப்புக்கு உதவக்கூடிய டெபாசிட் திட்டங்கள் மற்றும் ppf திட்டங்களில் பங்களிப்பு தருவதற்காக வாடிக்கையாளர்கள் வருகை தரலாம் என்றும் தெரிவித்துள்ளது.
ஆர்பிஐ வெளியிட்ட அறிவிப்பில் அரசு பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வசதியாக அனைத்து வங்கிகளும் மார்ச் 31 ஆம் தேதி செயல்படும் என தெரிவித்துள்ளது. அரசு கேட்டுக் கொண்டதற்கு இணங்க இந்த சுற்றறிக்கை வெளியிடுவதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அதாவது அரசு சம்பந்தப்பட்ட பரிவர்த்தனைகளில் ஈடுபட்டுள்ள வங்கிகள் செயல்படும் என தெரிவித்தது. இதனை அடுத்து மார்ச் 22ஆம் தேதி ஆர்பிஐ வெளியிட்ட செய்தி குறிப்பில் எலக்ட்ரானிக் எனப்படும் மின்னணு பரிமாற்றங்கள் ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல செயல்படும் என்று தெரிவித்திருந்தது.
ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் செயல்பட்டாலும் பெரும்பாலும் பொதுமக்கள் அன்றைய தினம் சேவைகளை பெறமுடியாது என்றே தெரிகிறது.
Story Written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்



Click it and Unblock the Notifications