டெல்லி: பொதுத்துறை நிறுவனங்களால் அரசுக்கு இழப்பு தான். இதனால் அரசுக்கு தேவையற்ற பொருளாதார இழப்பு என மாருதி சுசூகி நிறுவனத்தின் தலைவர் ஆர்சி பார்கவா தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து கூறுகையில், ஒரு நிறுவனம் தனது செயல்பாடுகளின் வழியாக ஈட்டும் வருவாயைக் கொண்டே தொடர்ந்து செயல்பட வேண்டும். அதன் வருவாயை முதலீடாகக் கொண்டே வளர்ச்சி அடைய வேண்டும்.
ஆனால் இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் செயல்படுவதற்கு அரசுக்கு நிதி வழங்க வேண்டிய நிலை உள்ளது.
இந்தியாவின் வளம் சுரண்டப்படுகிறது
இதன் மூலம் பொதுத்துறை நிறுவனங்கள் இந்திய அரசின் வளத்தை சுரண்டுகின்றன. ஒரு நிறுவனத்தால் தனது இயக்கத்துக்கு தேவையான வருவாயை ஈட்ட முடியவில்லை என்றால், அதன் அடிப்படை கட்டமைப்பிலேயே மிகப்பெரிய பிரச்சனை இருக்கிறது என அர்த்தம். அப்படிப்பட்ட நிறுவனங்களால் தொடர்ந்து இழப்பு மட்டும் தான் ஏற்படும்.
சுதந்திரமாக செயல்பட முடியவில்லை
பொதுத்துறை நிறுவனங்களை நடத்துவது என்பது அரசுக்கு தொடர் இழப்பு தான். என்னை பொறுத்தவரையில் அரசு என்பது தொழிற்துறை செயல்பாட்டில் ஈடுபடவே கூடாது. பொதுத்துறை நிறுவனங்களை பொறுத்தவரையில் அவை சுதந்திரமாக செயல்படக்கூடிய கட்டமைப்பை கொண்டிருக்கவில்லை. அவை காலத்திற்கு ஏற்ப தங்களை மேம்படுத்த முடியாமல் உள்ளன. தனியார் நிறுவனங்களுடன் போட்டி போட முடியாமல் உள்ளன.
தேங்கி நிற்கும் பொதுத்துறை நிறுவனங்கள்
அவை ஒரே இடத்திலேயே தேங்கி நிற்கின்றன. இந்தியா மட்டும் அல்ல, ரஷ்யா, பிரிட்டன், ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்று வருகின்றன.
உதாரணத்திற்கு மாருதி உதயாக் லிமிடெட் நிறுவனத்தினையே எடுத்துக் கொள்வோம்.இது அரசின் வசம் இருந்த வரையில் பெரியளவில் வளர்ச்சி காணவில்லை. இதே தனியார் (மாருதி சுசூகி இந்தியா லிமிடெட்) ஆன பிறகு எந்த அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
வரி செலுத்துவோரிடம் இருந்து பணம்
ஒரு நிறுவனம் என்பது செல்வத்தை உருவாக்குவதாக இருக்க வேண்டும். அவற்றை சுரண்டுவதாக இருக்க கூடாது. பொதுத்துறை நிறுவனங்களை பொறுத்தவரையில் அப்படி இல்ல. அவை அரசினை எதிர் நோக்கியுள்ளன. ஒரு திறமையற்ற அமைப்பை ஆதரிக்க, வரி செலுத்துவோரிடமிருந்து பணத்தை எடுத்துக் கொள்கிறார்கள் என்றும் பார்கவா சுட்டி காட்டியுள்ளார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications