இந்திய ஆட்டோமொபைல் துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் மாருதி சுசூகி புதிதாக ஒரு தொழிற்சாலையை உருவாக்க முடிவு செய்துள்ளது.
எலக்ட்ரிக் கார் உற்பத்தியை பெரும்பாலான கார் உற்பத்தி நிறுவனங்கள் துவங்கியுள்ள நிலையில் மாருதி சசூகி மட்டும் எவ்விதமான அறிவிப்பும் வெளியிடாமல் உள்ளது. இந்தச் சூழ்நிலையில் மிகப்பெரிய முதலீட்டில் உருவாக்கப்படும் புதிய தொழிற்சாலை எலக்ட்ரிக் வாகனங்களுக்கானதாக இருக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மாருதி சுசூகி-யின் புதிய தொழிற்சாலை எந்த ஊரில் தெரியுமா..?!
மாருதி சுசூகி
நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளரான மாருதி சுசூகி இந்தியா தனது புதிய உற்பத்தி தொழிற்சாலையை ஹரியானா மாநிலத்தில் சோனிபட் மாவட்டத்தில் ரூ. 18,000 கோடிக்கு மேல் முதலீடு செய்து அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
பெரிய முதலீடு
இந்தியாவில் எந்த ஒரு கார் தயாரிப்பு நிறுவனமும் இவ்வளவு பெரிய முதலீட்டை செய்தது இல்லை என்பதால் இந்திய ஆட்டோமொபைல் துறைக்கு மாருதி சுசூகியின் அறிவிப்பு மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.
சுசூகி மோட்டார்சைக்கிள்
இதோடு சுசூகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் இதே ஹரியானா மாநிலத்தில் சோனிபட் மாவட்டத்தில் மற்றொரு இரு சக்கர வாகன உற்பத்தி தொழிற்சாலையை ரூ.1,466 கோடியை முதலீட்டில் அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
13,000 பேருக்கு வேலைவாய்ப்பு
இவ்விரு தொழிற்சாலையும் முழுத் திறனில் முழுமையாக இயங்க துவங்கினால் சுமார் 13,000 பேருக்குப் புதிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இந்திய ஆட்டோமொபைல் துறை 2021ஆம் ஆண்டில் ஜெர்மனியை பின்னுக்குத்தள்ளி உலகின் 4வது பெரிய சந்தையாக உருவெடுத்துள்ளது.
19500 கோடி ரூபாய் முதலீடு
இந்த நிலையில் மாருதி சுசூகி மற்றும் சுசூகி மோட்டார்சைக்கிள் நிறுவனங்களின் 19500 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக உள்ள இரு தொழிற்சாலைக்கு ஹரியானா மாநில அரசு சோனிபட் மாவட்டத்தில் கார்கோடா என்னும் பகுதியில் சுமார் 800 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.
4வது தொழிற்சாலை
கார்கோடா பகுதியில் அமைக்கப்படும் புதிய தொழிற்சாலை மாருதி சுசூகி நிறுவனத்தின் 4வது தொழிற்சாலையாகும். கூர்கானியில் 300 ஏக்கரில் தொழிற்சாலையும், மனேசர் 600 ஏக்கரில் தொழிற்சாலையும், ரோஹ்தக் 600 ஏக்கரில் தொழிற்சாலையும் வைத்துள்ளது மாருதி சுசூகி.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!



Click it and Unblock the Notifications