டெல்லி: இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி ஏப்ரல் மாதத்தில் இருந்து தங்கள் கார்களின் விலையை 4 சதவீதம் வரை உயர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது.
மாருதி சுசூகி நிறுவனம் இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் திடீரென தங்கள் கார்களின் விலையை 4 சதவீதம் வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. உள்ளீட்டு செலவினம் மற்றும் செயல்பாட்டு செலவினங்கள் அதிகரித்திருப்பதாலேயே கார்களின் விலையை உயர்த்துவதாக மாருதி சுசூகி நிறுவனம் விளக்கம் தந்துள்ளது.

செலவினங்களை கட்டுப்படுத்தி வாடிக்கையாளர்கள் மீது திணிக்க கூடாது என்று முயற்சி செய்ததாகவும் இருந்தாலும் சில செலவினங்கள் அதிகரித்ததால் அதனை வாடிக்கையாளர் மீது சுமத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி இருப்பதாகவும் மாருதி சுசூகி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதிகபட்ச மூலப் பொருட்கள் கட்டணம், தளவாடச் செலவினங்கள் உள்ளிட்ட பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இத்தகைய சூழலில் தான் மாருதி சுசூகி இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மாருதி சுசூகி கடந்த டிசம்பர் மாதம் தான் ஜனவரியிலிருந்து தங்கள் நிறுவன கார்களின் விலையை 4 சதவீதம் உயர்த்துவதாக அறிவித்திருந்தது. இதன்படி பார்க்கும்போது ஜனவரி மாதம் 4% ஏப்ரல் மாதம் 4% என நான்கு மாதங்களில் 8% வரை கார்களின் விலையை மாருதி சுசூகி நிறுவனம் உயர்த்தியுள்ளது.
அதுமட்டுமின்றி குறிப்பிட்ட சில வகை மாடல்களுக்கான விலையை மட்டும் பிப்ரவரி மாதத்தில் 1500 ரூபாயிலிருந்து 32,500 வரை மாருதி சுசூகி உயர்த்தியது. இப்படி அடுத்தடுத்த கார்களின் விலை உயர்த்துவது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மாருதி சுசூகி தங்கள் கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவிப்பு வெளியானதை அடுத்து பங்குச்சந்தையில் அதன் பங்கு மதிப்பு 2 சதவீதம் வரை உயர்ந்தது. மார்ச் 17ஆம் தேதி அன்று மும்பை பங்குச்சந்தையில் மாருதி சுசூகியின் ஒரு பங்கு மதிப்பு 11,548 ரூபாய் என வர்த்தகமானது.
மாருதி சுசூகி நிறுவனம் இந்திய வாகன விற்பனை சந்தையில் முதலிடத்தில் இருக்கிறது. இந்த நிறுவனம் 2024 ஆம் ஆண்டு வாகன விற்பனையில் 41.6% பங்களிப்பைக் கொண்டிருக்கிறது. இரண்டாவது இடத்தில் ஹுண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் இருக்கின்றன. உலகிலேயே மூன்றாவது பெரிய வாகன விற்பனை நாடாக இந்தியா இருக்கிறது, வாகன உற்பத்தியில் நான்காவது பெரிய நாடாக இந்தியா செயல்படுகிறது. அடுத்தடுத்து கார்களின் விலையை உயர்த்தினாலும் இந்தியர்களுக்கு பிடித்த நிறுவனமாக மாருதி சுசூகி தொடர்ந்து திகழ்ந்து வருகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications