அடேங்கப்பா.. இத்தனை லட்சம் கோடியா? மாருதி சுசூகி நிறுவனத்தின் புதிய சாதனை..!

மும்பை: மாருதி சுசூகி நிறுவனம் 4 லட்சம் கோடி ரூபாய் என்ற சந்தை மூலதனத்தை எட்டிய 19ஆவது இந்திய நிறுவனம் என்ற புதிய மைல்கல்லை தொட்டு சாதனை படைத்துள்ளது.

இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூகி இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் 4 லட்சம் கோடி ரூபாய் சந்தை மூலதனத்தை கடந்த நிறுவனமாக மாறியது.

அடேங்கப்பா.. இத்தனை லட்சம் கோடியா? மாருதி சுசூகி நிறுவனத்தின் புதிய சாதனை..!

மாருதி சுசூகி நிறுவனத்தின் பங்குகள் 2024 ஆம் ஆண்டில் மட்டும் 23 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளன. மும்பை பங்குச்சந்தையில் மார்ச் 27ஆம் தேதி மாருதி சுசூகி நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பானது ரூ.12,725 என்ற உச்சத்தை எட்டியது.

இந்திய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் ஆர்ஐஎல்,டிசிஎஸ், எச்டிஎப்சி வங்கி, இன்போசிஸ், ஐசிஐசிஐ வங்கி, பாரதி ஏர்டெல் எஸ்பிஐ, எல்ஐசி, ஹெச்யுஎல், ஐடிசி, எல்&டி, பஜாஜ் பைனான்ஸ், அதானி எனர்ஜி, அதானி கிரீன், ஹெச்சிஎல், அதானி எண்டர்பிரைசஸ், கோடக் மகேந்திரா மற்றும் அதானி டோட்டல் கேஸ் ஆகிய நிறுவனங்களை அடுத்து மாருதி சுசூகி இந்த மைல்கல்லை எட்டியுள்ளது.

மாருதி சுசூகி நிறுவனத்தை பொறுத்தவரை அதன் பிரீமியம் ரக கார்கள் விற்பனை அதிகரித்தது நிறுவனத்தின் சந்தை மூலதனம் அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கிறது. பிரீமியம் அல்லாத கார்களின் விற்பனை என்பது மந்தமாகவே இருக்கிறது. மாருதி சுசூகி நிறுவனத்தின் இயர் ஆன் இயர் லாபம் என்பது 33 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளது .

சந்தையில் மாருதி சுசூகி நிறுவனத்தின் புதிய வாகனங்களான நியூ பிரெஸ்ஸா, கிராண்ட் வித்தாரா மற்றும் பிரான்க்ஸ் ஆகியவை விற்பனை வளர்ச்சியில் பெரும் பங்காற்றுகின்றன.

அண்மைக்காலமாக உலகம் முழுவதும் மின்சார கார்களுக்கான தேவை என்பது அதிகரித்திருந்தது. ஆனால் மின்சார வாகனங்களின் விலை அதிகம் மற்றும் விநியோக சங்கிலியில் ஏற்பட்ட பிரச்சனை ஆகியவை காரணமாக தற்போது மக்கள் ஹைபிரிட் ரக கார்களின் பக்கம் திரும்பி உள்ளனர். இதன் காரணமாகவும் மாருதி சுசூகி நிறுவனத்தின் கார்கள் விற்பனை உயர்ந்துள்ளது.

மாருதி நிறுவனம் அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் பல்வேறு ஹைபிரிட் மாடல் கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. நிறுவனத்தின் வளர்ச்சி பாசிடிவ்வாக இருக்கிறது என தரகு நிறுவனங்கள் கூறுகின்றன. மாருதி சுசூகி நிறுவனத்தின் பங்கு மதிப்புக்கான இலக்கினை ரூ.13,000 என நிர்ணயத்துள்ள ஜே எம் பைனான்சியல் தரகு நிறுவனம், பங்குகளை வாங்கலாம் என்ற நிலைப்பாட்டில் வைத்துள்ளது.


Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+