மாருதி சுசூகி: லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வந்திருக்கு..!!இனி டாடா,ஹூண்டாய் ஓரம்போக வேண்டியதுதான்..!

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி இந்தியா, இத்தனை வருடங்களாக எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய திட்டமிடாமல் இருந்த காரணத்தால் சக போட்டி நிறுவனங்கள் போட்டிப்போட்டு சார்ஜிங் ஸ்டேஷன்களை நாடு முழுவதும் அமைக்கப்படும் போது ஜாலியாக இருந்தது.

இந்த இடைப்பட்ட காலத்தில் டாடா முதல் ஹூண்டாய் வரை, இந்தியன் ஆயில் முதல் ஜியோ BP வரை, தனியார் எலக்ட்ரிக் நிறுவனங்கள் என அனைத்து தரப்பினரும் நாட்டின் பெரும்பாலான இடத்தில் சார்ஜிங் கட்டமைப்பை போதுமான அளவுக்கு அமைத்துள்ளது. இதனால் எலக்ட்ரிக் கார்களை வாங்குவோருக்கு ரேஞ்ச் அச்சம் குறைந்து மக்கள் மத்தியில் EV மீதான மோகம், ஆர்வமாக மாறியுள்ளது.

மாருதி சுசூகி: லேட்டா வந்தாலும், லேட்டஸ்டா வந்திருக்கு..!!இனி டாடா,ஹூண்டாய் ஓரம்போக வேண்டியதுதான்..!

இந்த மாற்றத்தைச் சரியான வகையில் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ள மாருதி சுசூகி நிறுவனம் 2025 ஜனவரி மாதம் தனது முதல் எலக்ட்ரிக் காரான மிட்-சைஸ் SUV கான்செப்ட் eVX-ஐ புதிய பெயரில் அறிமுகம் செய்யும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்த கார்களை மாருதி சசூகி வாடிக்கையாளர்கள் எளிதாகவும் சிறப்பாகவும் பயன்படுத்த சுமார் 25,000 எலக்ட்ரிக் வாகன சார்ஜிங் நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக இந்தியாவில் 2,300 நகரங்களில் இருக்கும் 5,100-க்கும் மேற்பட்ட சர்வீஸ் சென்டர்களில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கும் திட்டத்தில் இறங்கியுள்ளது.

இதோடு அல்லாமல் மாருதி சசூகி எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் (OMCs) மற்றும் மின்சார நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சார்ஜிங் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த அமைப்பு, நாட்டின் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டுக்கு இருக்கும் தடைகள் அனைத்தும் நீங்கி வேகமாக மக்கள் தினசரி பயன்படுத்தும் வாகனமாக மாறும்.

இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை நாட்டில் 81,000 க்கும் மேற்பட்ட ரீடைல் விற்பனை நிலையங்களை இணைந்து நடத்தி வருகிறது. இந்த 3 நிறுவனங்கள் மட்டுமே சுமார் 90% ரீடைல் பெட்ரோல் பங்குகளை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இத்தகைய கூட்டணி உடன் மாருதி சுசூகி கூட்டணி வைக்கும் போதும் பெரும் மாற்றமாக இருக்கும்.

மாருதி சுசூகி eVX கார் 20-25 லட்சத்துக்கு இடையிலான விலையில் நிர்ணயிக்கப்படும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்ட மூன்று மாதங்களில் 3,000 கார்தளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

இந்த எலக்ட்ரிக் SUV கார், அதன் குஜராத் ஆலையில் தயாரிக்கப்பட்டு, பிரீமியம் நெக்ஸா கடையின் மூலம் விற்பனை செய்யப்படும். இதோடு அடுத்த 6-7 ஆண்டுகளில் மாருதி சுமார் 6 எலக்ட்ரிக் வாகனங்களில் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+