இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசூகி பணவீக்கம் மற்றும் அதிகரித்துள்ள உற்பத்தி பொருட்களின் விலைகளால் ஜனவரி 2024 முதல் தன்னுடைய அனைத்து கார்களின் விலைகளையும் உயர்த்த முடிவு செய்துள்ளது.
மாருதி சுசூகி நிறுவனம் கடந்த சில காலாண்டுகளாக செலவைக் குறைப்பதற்கும், உற்பத்தி பொருட்களின் விலை உயர்வை தடுப்பதற்கும் அதிகப்படியான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதே வேளையில், வர்த்தக சந்தையின் தாக்கத்தால் பல்வேறு உற்பத்தி பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.

இந்த விலை உயர்வு அதன் லாப அளவீடுகளை கடுமையாக பாதிக்கும் காரணத்தாலும், சந்தையில் இருக்கும் போட்டிக்கு ஏற்றவாறு விலையை கொண்டு வர முடியாத காரணத்தால் விலை சுமையை வாடிக்கையாளர்கள் தலையில் விதிப்பதை தவிர வேறு வழியே இல்லாத நிலையில் ஜனவரி மாதம் கார்களின் விலையை உயர்த்த உள்ளது.
எந்த கார் எவ்வளவு விலை உயரும் என்ற கணக்கீட்டையோ அல்லது கணிப்பையோ வெளியிடவில்லை. ஆனால் விலை உயர்வை உறுதி செய்துள்ளது மாருதி சுசூகி. அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தனது உற்பத்தி விலைக்கும், விற்பனை விலைக்கும் மத்தியில் லாப அளவீட்டை கடைப்பிடிக்கும்.
இதில் விலை ஏற்ற இறக்கத்தை சமாளிக்க 2-5 சதவீதம் Buffer அளவீடு இருக்கும், இது உற்பத்தி செலவுகள் அதிகரிக்கும் போது மறையும் இந்த சூழ்நிலையை மறைக்க தான் விலை உயர்த்தப்படுகிறது. இந்த நிலையை தான் தற்போது மாருதி சுசூகி இழந்துள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் அதிகப்படியான கார்களை விற்கும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பட்டியலில் மாருதி சுசூகி தான் முதல் இடத்தில் உள்ளது. பட்ஜெட் விலையில் கார்களை வாங்க வேண்டும் என திட்டமிடும் அனைத்து இந்திய மக்களுக்கு மாருதி சுசூகி தான் முக்கிய டார்கெட் ஆக உள்ளது.
இதனால் இந்த விலை உயர்வு புதிதாக கார் வாங்குவோர் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றால் மிகையில்லை. சமீபத்தில் ஆடி கார் நிறுவனம் ஜனவரி மாதம் முதல் தனது கார் விலையை 2 சதவீதம் வரையில் உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications