டெல்லி : தொலைத் தொடர்பு துறையை தொடர்ந்து தற்போது ஆட்டோமொபைல் துறையிலும் வாகனங்களின் விலையை அதிகரிக்க உற்பத்தி நிறுவனங்கள் ஆயத்தமாகி வருகின்றன.
அந்த வகையில் நாட்டின் முன்னணி கார் உற்பத்தியாளாரான மாருதி சுசூகி இந்தியா, ஜனவரி 2020ல் இருந்து கார்களின் விலையை அதிகரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
எனினும் எந்த மாடல்களுக்கு எவ்வளவு விலை அதிகரிப்பு என்பதை இந்த நிறுவனம் அறிவிக்கவில்லை.
வாகனங்களின் விலை அதிகரிப்பு
கார்கள் தயாரிக்கும் செலவினங்கள் அதிகரித்து வரும் இந்த நிலையில், முக்கிய மூலதன பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், உற்பத்தி செலவினங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக இந்தியாவில் வாகனங்களின் விற்பனை சரிந்து வருவதால், வாகன உற்பத்தி நிறுவனங்கள் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளன. இதனாலேயே பல்வேறு வாகன உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தியை பெரும்பாலும் குறைத்து விட்டன. இந்த நிலையில் செலவினை ஈடுகட்ட மாருதி சுசூகி வாகன விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
புதிய கட்டுப்பாடுகள்
அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் விற்பனை செய்யப்படும் அனைத்து வாகனங்களும் பி.எஸ் 6 விதிகளை பின்பற்றி இருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக கார்களின் ஏர்பேக் வசதி, ஏபிஎஸ் போன்ற பாதுகாப்பு வசதிகள் அனைத்து கார்களிலும் செய்து இருக்க வேண்டும் என வசதிகள் பற்றி கூறப்பட்டுள்ளது. இதன் விளைவாக வாகன உற்பத்தி செலவுகள் முன்னர் இருந்ததை விட கணிசமான அளவு உயர்ந்துள்ளது.
செலவினங்கள் அதிகரிப்பு
இது குறித்து மாருதி சுசூகி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஓராண்டாகவே கார் தயாரிப்பு உதிரி பாகங்களின் விலை அதிகரித்து வருகிறது. இது தவிர ஜிஎஸ்டி வரி உட்பட பல வகையிலும் செலவினங்கள் இன்னும் கூடியுள்ளன. இதனால் உற்பத்தியாளர்கள் வேறு வழியின்றி கார்களின் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர்.
மாடல்களுக்கு ஏற்ப விலையேற்றம்
இந்த விலையேற்றமானது ஒவ்வொரு ரக கார்களின் மாடல்களுக்கு ஏற்ப அதிகரிக்கும் என்றும் மாருதி தெரிவித்துள்ளது. எனினும் எந்த மாடல்களுக்கு எவ்வளவு விலை என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் மாருதி சுசூகி நிறுவனம் அரினா மற்றும் நெக்ஷா டீலர்ஷிப்கள் மூலம் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இதில் அரினா டீலர்ஷிப்கள் மூலம் ஆல்டோ, வேகன் ஆர், செலிரியோ, எஸ் பிரஸ்ஸோ, ஸ்விஃப்ட், டிசையர், விட்டாரா, பிரெஸ்ஸா, எர்டிகா மற்றும் ஈகோ ஆகியவை அடங்கும்.
நெக்ஷா மூலம் விற்பனை
இதே நெக்ஸா மூலம் இக்னிஸ், பலேனோ, சியாஸ், எஸ்-கிராஸ் மற்றும் எக்ஸ் எல் 6 போன்ற மாடல்களை விற்பனை செய்கின்றன. கடந்த ஆண்டு பல செலவுகள் மூலம் வாகன விற்பனை மற்றும் விலை மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் 2019ல் மாருதி சுசூகி இரண்டு முறை மட்டுமே கார்களின் விற்பனையை அதிகரித்தது. இது ஜனவரியில் 0.2%மும், இதே அக்டோபரில் 4.5 சதவிகிதமும் விற்பனை அதிகரித்திருந்தது.
தொடர் வீழ்ச்சி
எனினும் ஜனவரி, அக்டோபர் தவிர மீதமுள்ள மாதங்களில் விற்பனை வீழ்ச்சி கண்டது. இது நவம்பரில் 1.9%மும், செப்டம்பரில் 24.4 சதவிகித வீழ்ச்சியும், இதே ஆகஸ்டில் 32.7 சதவிகித வீழ்ச்சியும், ஜூலையில் 33.5 சதவிகித வீழ்ச்சியும், ஜூனில் 14 சதவிகிதமும், மே மாதம் 22 சதவிகித வீழ்ச்சியும், இதே ஏப்ரலில் 17.2 சதவிகிதமும், இதே மார்சில் 1.6 சதவிகிதமும், பிப்ரவரியில் 0.8 சதவிகித வீழ்ச்சியிலும் உள்ளது.
எப்படியோங்க சீக்கிரம் போய் விலை அதிகரிப்பதற்குள் காரை வங்கிப் போடுங்கள்.
More From GoodReturns

இந்தியாவுக்காக நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் ரஷ்யா.. ஈரான் பிரச்சனையில் வந்த தீர்வு..!!

100 டாலரை தொட்ட கச்சா எண்ணெய்.. ஓரே நாளில் 25% விலை உயர்வு.. தீவிரம் அடையும் ஈரான் போர்..!!

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் போரை விடுங்க.. இந்திய -அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் என்ன ஆச்சு? அமெரிக்க அரசு பதில்

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!



Click it and Unblock the Notifications