இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோ மொபைல் நிறுவனமான மாருதி சுசூகி சிப் தட்டுப்பாடு, சப்ளை செயின் பிரச்சனை, உற்பத்தி பொருட்களின் விலை உயர்வு எனப் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் வேளையில் சில முக்கியமான முடிவுகளை இன்று அறிவித்துள்ளது.
இந்த முடிவுகள் மூலம் மாருதி சுசூகியின் நீண்ட கால வர்த்தகம் மொத்தமாக மாறுவது மட்டும் அல்லாமல், வருமானமும் அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.
முதலில் புதிய மாருதி காரை வாங்கும் வாடிக்கையாளர்களைப் பாதிக்கும் மாருதி சுசூகி நிறுவனத்தின் முடிவைப் பார்ப்போம்.
மாருதி சுசூகி
மாருதி சுசூகி நிறுவனத்தின் வாகன உற்பத்தி செலவுகள் பெரிய அளவில் அதிகரிக்கும் காரணத்தால் கார்களின் விலையை மீண்டும் உயர்த்த முடிவு செய்துள்ளது. பல்வேறு உற்பத்தி பொருட்களின் விலை பெரிய அளவில் அதிகரித்துள்ளதால் மாருதி சுசூகி தொடர்ந்து சுமையை ஏற்றுக்கொள்ள முடியாது.
விலை உயர்வு
இதனால் தற்போது கூடுதலாக ஏற்படும் செலவுகள் அனைத்தையும் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்க முடிவு செய்துள்ளது மாருதி சுசூகி. இதன் படி புதிய விலை உயர்வு வருகிற ஜனவரி 2022ல் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. மேலும் ஒவ்வொரு கார்களுக்கும் மாற்றப்பட்ட விலை உயர்வு இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
எஸ்யூவி கார்கள்
இதைத் தொடர்ந்து இந்தியாவில் தற்போது மக்கள் அதிகளவில் சிறிய ரகக் கார்களுக்குப் பதிலாக எஸ்யூவி கார்களை அதிகம் விரும்பும் காரணத்தால், ஹேட்ச்பேக் கார்களின் விற்பனை பெரிய அளவில் குறைந்துள்ளது. இதனால் அனைத்து முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தற்போது அதிகப்படியான எஸ்யூவி கார்களைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது.
3 வருட திட்டம்
இந்நிலையில் மாருதி சுசூகி நிறுவனம் சிறிய மற்றும் மலிவான விலை கார்களைத் தாண்டி அதிகளவில் எஸ்யூவி கார்களைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதன்படி அடுத்த 3 வருடத்தில் 20 லட்சம் ரூபாயக்குக் கீழ் பல்வேறு எஸ்யூவி கார்களை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.
மலிவுவிலை கார்கள்
அதிலும் முக்கியமாக மாருதி சுசூகி மலிவுவிலை கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களை விடக் கூடாது என்பதற்காக 10 லட்சம் ரூபாய் விலையில் துவங்கும் 4 புதிய எஸ்யூவி கார்களை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.
வர்த்தகம் மாற்றம்
மேலும் மாருதி சுசூகி நிறுவனத்தின் எஸ்யூவி கார்கள் பிரிவில் இருக்கும் கார்களுக்கு அப்கிரேட் செய்ய அதிகப்படியான வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் வாடிக்கையாளர்கள் ஹூண்டாய், கியா, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களை வாங்குவதாக நம்புகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications