இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசூகி செப்டம்பர் காலாண்டில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிகப்படியான லாபத்தை இழந்துள்ளது. இதன் மூலம் இந்நிறுவன முதலீட்டாளர்கள் சோகத்தில் இருந்தாலும், இந்நிறுவனப் பங்குகள் உயர்வுடன் காணப்படுகிறது.
இன்றைய வர்த்தக முடிவில் மாருதி சுசூகி நிறுவனப் பங்குகள் 0.71 சதவீதம் வரையில் உயர்ந்து ஒரு பங்கு விலை 7,352.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சரி மாருதி சுசூகி லாபத்தில் அப்படி எவ்வளவு சரிவை எதிர்கொண்டது..?!
மாருதி சுசூகி நிறுவனம்
மாருதி சுசூகி நிறுவனம் இன்று வெளியிட்ட செப்டம்பர் காலாண்டு முடிவுகளில் இந்நிறுவனத்தின் லாப அளவீடுகள் 65.35 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் மாருதி சுசூகி 1,371.60 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்ற நிலையில், தற்போது வெறும் 475.30 கோடி ரூபாய் மட்டுமே பெற்றுள்ளது.
மொத்த விற்பனை
இதேபோல் இந்நிறுவனத்தின் மொத்த விற்பனை அளவீடும் 9.09 சதவீதம் குறைந்து 19,297.80 கோடி ரூபாயாக உள்ளது. இது கடந்த நிதியாண்டில் 17,689.30 கோடி ரூபாயாக இருந்தது. இக்காலாண்டில் சிப் தட்டுப்பாடு மற்றும் டீசல் கார் உற்பத்தி நிறுத்தம் போன்ற முக்கியமான காரணத்தால் இந்நிறுவனத்தின் வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.
உற்பத்தி பொருட்கள் விலை
மேலும் இந்தியாவில் உற்பத்தி பொருட்களின் விலை உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, கார்களின் விலை உயர்வு எனப் பல காரணிகள் செப்டம்பர் காலாண்டில் விற்பனை அளவீடுகள் பாதிக்கப்பட்டு உள்ளது. இதோடு கார் சிப் தயாரிப்பும் பாதிக்கப்பட்டு உள்ளது.
கார் விற்பனை
இக்காலாண்டில் மாருதி சுசூகி நிறுவனம் மொத்தம் 3,79,541 கார்களை விற்பனை செய்துள்ளது, இதில் 3,20,133 கார்களை இந்தியாவிலும், 59,408 கார்களை வெளிநாட்டிலும் விற்பனை செய்துள்ளது. மேலும் சிப் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தட்டுப்பாடு காரணமாகக் கார்களை ஆர்டர் செய்துள்ள 2,00,000 வாடிக்கையாளர்களுக்குக் கார்களை டெலிவரி செய்ய முடியவில்லை.
ஸ்டீல், அலுமினியம் விலை
இக்காலாண்டில் கார் தயாரிப்புக்கு மிக முக்கியத் தேவையான ஸ்டீல், அலுமினியம், இதர சில உலோகங்களின் விலை அதிகளவில் உயர்ந்துள்ளது. மாருதி சுசூகி நிறுவனம் இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கை எடுத்த வேளையிலும் விலை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications