சென்னை: மாருதி சுசூகி இந்தியா, மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இந்நிறுவனம் தற்போது சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ. 450 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், தங்களது செயல்பாடுகளை பசுமை ஆக்குவதற்கான முயற்சியில் நிறுவனம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களைப் (Renewable Energy) பயன்படுத்தி மாருதி சுசூகி இந்தியா, அடுத்த மூன்று ஆண்டுகளில் சோலார் மின்சாரம் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திட்டங்களில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. 2023 முதல் 2024ஆம் நிதியாண்டில், ஏற்கனவே ரூ.120.8 கோடி முதலீடு செய்துள்ளது. இனி வரும் நிதியாண்டுகளில் மாருதி சுசூகி நிறுவனம் தொடர்ந்து தங்களுடைய முதலீட்டை 5 மடங்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி ரூ. 450 கோடி முதலீடு செய்யவுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, 2030ஆம் ஆண்டு முதல் 2031ஆம் ஆண்டிற்குள் கார் உற்பத்தியினை, சுமார் 2 மில்லியனிலிருந்து 4 மில்லியனாக அதிகரிப்பதற்கு நிறுவனம் திட்டமிட்டுள்ள நிலையில், "எங்கள் செயல்பாடுகளில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடுகளை அதிகரிப்பதற்கான முயற்சிகளை நாங்கள் விரைவுபடுத்தி வருகிறோம்" என்று மாருதி சுசூகி நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி Hisashi Takeuchi தெரிவித்துள்ளார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என்பது இயற்கை வளங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ஆற்றல் ஆகும். இதில் சூரிய ஒளி, காற்று, நீர் போன்றவை அடங்கும். இவை பாரம்பரிய எரிசக்தி வளங்களான நிலக்கரி, பெட்ரோல் போன்றவற்றை விட சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதில்லை. கார் உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பல்வேறு வழிகளில் உதவுகிறது.
செலவு குறைப்பு: சூரிய மின்சாரம் போன்ற புதுப்பிக்கத்தக்க ஆதாரங்கள் பாரம்பரிய எரிசக்தி ஆதாரங்களை விட மலிவானவை. இது கார் உற்பத்தியின் மொத்த செலவைக் குறைக்க உதவும்.
கார்பன் குறைப்பு: புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கார் உற்பத்தி செயல்பாட்டின் போது வெளியாகும் CO2 அளவைக் குறைக்கின்றன. இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாடு குறைந்து, பூமி வெப்பமயமாதல் தணிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருப்பதற்கும் இது உதவுகிறது
மாருதி சுசூகி நிறுவனம் தனது சூரிய ஆற்றலை 2024ஆம் நிதியாண்டில் 43.2 மெகாவாட்டாக விரிவுபடுத்தியுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவது, கார் உற்பத்தியை சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு உற்பத்தி செய்ய உதவும்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications