சிங்கம் களம் இறங்கிடுச்சு.. மாருதி சுசூகி புதிய EV கார், 550 கிமீ மைலேஜ்.. இதை விட வேறென்ன வேணும்..!

இந்திய ஆட்டோமொபைல் துறை சரியான பாதையில் பயணிக்கத் துவங்கியுள்ளது, மக்கள் மத்தியில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிகப்படியான ஆர்வம் இருந்தாலும் இந்தியாவில் போதுமான பப்ளிக் சார்ஜிங் கட்டமைப்பு இல்லாத காரணத்தால் எலக்ட்ரிக் கார்களை வாங்க பெரும்பான்மையான மக்கள் தயங்கினர்.

ஆனால் ஹைப்ரிட் மாடல் கார்கள் வந்த உடன் மக்கள் எலக்ட்ரிக் கார்களை ஓரம் கட்டிவிட்டு மக்கள் இதை வாங்க துவங்கியது, கடந்த 6 மாத விற்பனை அளவுகளைப் பார்க்கும் போது தெரிகிறது. இந்தப் பாதையை வகுத்த மாருதி சுசூகி புதிய எலக்ட்ரிக் கார்-ஐ அறிமுகம் செய்யும் பணியில் இறங்கியுள்ளது.

சிங்கம் களம் இறங்கிடுச்சு.. மாருதி சுசூகி புதிய EV கார், 550 கிமீ மைலேஜ்.. இதை விட வேறென்ன வேணும்..!

இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி தனது புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி கார் குஜராத்தில் தயாரிக்கப்படும் என்றும், இதற்காக ஹன்சல்பூரில் உள்ள இந்நிறுவனத்தின் தற்போதைய உற்பத்தி தொழிற்சாலையில் ஒரு புதிய ஆலை சேர்க்கப்பட உள்ளதாகவும் புதன்கிழமை அறிவித்தது.

மாருதி சுசூகி நிறுவனம் குஜராத் மாநிலத்தின் ஹன்சல்பூரில் Suzuki Motor Gujarat Private Ltd (SMG) என்ற கார் உற்பத்தி ஆலையை நடத்தி வருகிறது. இது மாருதி சுசூகியின் முழு துணை நிறுவனமாகும், 2017 ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் இத்தொழிற்சாலையில் தான் புதிய எலக்ட்ரிக் கார் பளபளவெனத் தயாராக உள்ளது.

மாருதி சுசூகி நிறுவனத்தின் கார்ப்பரேட் விவகாரங்கள் பிரிவின் நிர்வாக இயக்குநர் ராகுல் பார்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்கள் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் கார் ஒரு SUV மாடலாக இருக்கும். மேலும் இந்தக் கார் 2024-25 ஆம் நிதியாண்டில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இப்புதிய எலக்ட்ரிக் கார் முழுக்க முழுக்கக் குஜராத் ஆலையில் தயாரிக்கப்பட்ட உள்ளது, ஹன்சல்பூரில் உள்ள தொழிற்சாலையில் தற்போது A, B மற்றும் C என 3 தொழிற்சாலைகள் உள்ளது. இந்தநிலையில் எலக்ட்ரிக் கார் தயாரிப்பதற்காகப் புதிய உற்பத்தி தளம் சேர்க்கப்படும் என்றும் ராகுல் பார்தி தெரிவித்தார்.

குஜராத் தொழிற்சாலையில் இருந்து தயாரிக்கப்படும் எலக்ட்ரிக் கார் இந்தியா முழுவதும் விற்கப்படுவதைத் தாண்டி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய உள்ளது. ஹன்சல்பூர் ஆலையில் எலக்ட்ரிக் கார் உற்பத்திக்காக 3,100 கோடி ரூபாய் முதலீடு செய்யக் குஜராத் அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மார்ச் 2022-ல் கையெழுத்திட்டது.

மாருதி சுசூகி நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்-ன் கான்செபட் மாடல் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு உள்ள வேளையில், இந்தக் கார் ஒரு முறை சார்ஜ் செய்யப்பட்டால் 550 கிலோமீட்டர் பயணம் செய்யக் கூடியவையாக இருக்கும். மேலும் இந்தக் கார் 60 கிலோவாட் பேட்டரி திறன் கொண்டதாக இருக்கும்.

இப்புதிய எலக்ட்ரிக் கார் எவ்வளவு தயாரிக்கப்பட உள்ளது, இதன் விலை என்ன ஆகிய முக்கிய விபரம் வெளியிடப்படவில்லை. இதேபோல் மாருதி சுசூகி - டோயோட்டா மத்தியிலான ஒப்பந்தம் மூலம் ஹைப்ரிட் வாகனங்களில் பெரும் வர்த்தகத்தை ஈர்த்த மாருதி சுசூகி தற்போது 100 சதவீத எலக்ட்ரிக் கார்-ஐ தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+